.

Pages

Thursday, August 2, 2018

அதிரை அருகே சூறைக்காற்று, கனமழையால் பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ ஆறுதல் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 02
அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை இடி, மின்னல் மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதில் அந்த ஊரிலுள்ள 9 குடிசை வீடுகள் பலத்த சேதமடைந்தன.
இந்த 9 வீடுகளில் ஒரு வீட்டில் இருந்த தாய் மகேஸ்வரிக்கும், அவர் மகள் சூரியாவுக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டு, இருவரும் உடனடியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுபற்றி தகவலறிந்ததும், பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி.சேகர் புதன்கிழமை கீழத்தோட்டம் சென்று சூறைக்காற்று, மழையால் சேதமடைந்த வீடுகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட 9 குடும்பத்தினருக்கும் தனது சார்பில் தலா ரூ.2,000 நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்.

இதன் பின்னர், தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாய், மகளை நேரில் சென்று பார்த்து தனது சார்பில் ரூ.5,000 வழங்கி, இருவருக்கும் ஆறுதல் கூறினார். அப்போது, தஞ்சை மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.இளங்கோவன், அதிமுக பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலர் பி.சுப்பிரமணியன், நகரச் செயலர் சுப.ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.