.

Pages

Monday, August 6, 2018

நில கிரயம் மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்பதார்களுக்கு முக்கிய அறிவிப்பு!

நில கிரயம் மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்பத்திற்கு நில உரிமையாளரின் தொலைபேசி எண்ணை மட்டுமே கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தகவல் தெரிவிதுள்ளா.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் நிலம் கிரயம் செய்திடும் போதும், இ-சேவை மையங்களில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்திடும் போதும் கிரயம் பெற்றவர்களான நில உரிமையாளரின் தொலைபேசி எண் மட்டுமே மனுவில் கொடுக்கப்பட்டு இணையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.  நில உரிமையாளர்கள் அல்லாத வெளி நபர்கள் மற்றும் தரகர்களின் தொலைபேசி எண்களை மனுவில் கொடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்யக்கூடாது. தவறும்பட்சத்தில் தொடர்புடைய நபர்களின் மீது சட்ட ரீதியான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.