தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு வட்டங்களில், கல்லணை கால்வாயிலிருந்து கல்யாண ஓடை பிரிவு வாய்க்கால் வழியாக குலமங்கலம் வாய்க்கால், 8/10 கிளை வாய்கால்களில், த.வடகாடு வாய்க்கால், 17/22 கிளை வாய்க்கால், ராஜாமடம் தாய் வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களில் விவசாயத்திற்காக கடைமடை வரை தண்ணீர் செல்வதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (07.08.2018) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஒரத்தநாடு வட்டத்தில் கல்லணைக் கால்வாயிலிருந்து கல்யாணஓடை பிரிவு வாய்க்கால் வழியாக குலமங்கலம் வாய்க்காலில் விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் குலமங்கலம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள அளவு, கடை மடை வரை தண்ணீர் கொண்டு செல்ல ஏற்படும் காலம், கால்வாயின் மூலமாக பாசன வசதி பெறும் விவசாய நிலங்களின் பரப்பளவு ஆகியவற்றை பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து, குலமங்கலம் வாய்க்காலிலிருந்து அறுமலை பிரிவு வாய்க்கால் 10 கிலோ மீட்டர் தூர்வாரப்பட்டுள்ளதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து கால்வாயில் கிடைக்கின்ற காய்ந்த செடி கொடிகளை தண்ணீர் வருவதற்கு முன் அகற்றிடவும், தண்ணீர் கடைமடை வரை தங்குதடையின்றி செல்வதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கல்யாணஓடையிலிருந்து 8/10 கிளை வாய்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதையும், தண்ணீர் திறக்கப்பட்டுள்ள அளவு மற்றும் பாசன வசதி பெறும் விவசாய நிலங்களின் பரப்பளவு ஆகியவற்றை கேட்டறிந்து தண்ணீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்படுத்திய காய்ந்த சரகுகள் மற்றும் செடிகொடிகளை பொதுப்பணித்துறை அலுவலர்களை கொண்டு உடனடியாக அகற்றிட அறிவுறுத்தினார்.
பின்னர், பட்டுக்கோட்டை ஒன்றியம், தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி வாய்க்கால்களிலும், மதுக்கூர் ஒன்றியம், மன்னங்காடு ஊராட்சியில் த.வடகாடு வாய்க்காலிலும், புன்னங்குன்று ஊராட்சியில் 17/22 கிளை வாய்க்காலிலும், பட்டுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் ராஜாமடம் தாய் வாய்க்காலிலும் விவசாயத்திற்காக கடைமடை வரை தண்ணீர் செல்வதை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் அவர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இவ்வாய்வின் போது பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மகாலெட்சுமி, பொதுப்பணித்துறை கல்லணை கால்வாய்கோட்ட உதவி செயற்பொறியாளர் சண்முகவேல் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
ஒரத்தநாடு வட்டத்தில் கல்லணைக் கால்வாயிலிருந்து கல்யாணஓடை பிரிவு வாய்க்கால் வழியாக குலமங்கலம் வாய்க்காலில் விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் குலமங்கலம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள அளவு, கடை மடை வரை தண்ணீர் கொண்டு செல்ல ஏற்படும் காலம், கால்வாயின் மூலமாக பாசன வசதி பெறும் விவசாய நிலங்களின் பரப்பளவு ஆகியவற்றை பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து, குலமங்கலம் வாய்க்காலிலிருந்து அறுமலை பிரிவு வாய்க்கால் 10 கிலோ மீட்டர் தூர்வாரப்பட்டுள்ளதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து கால்வாயில் கிடைக்கின்ற காய்ந்த செடி கொடிகளை தண்ணீர் வருவதற்கு முன் அகற்றிடவும், தண்ணீர் கடைமடை வரை தங்குதடையின்றி செல்வதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கல்யாணஓடையிலிருந்து 8/10 கிளை வாய்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதையும், தண்ணீர் திறக்கப்பட்டுள்ள அளவு மற்றும் பாசன வசதி பெறும் விவசாய நிலங்களின் பரப்பளவு ஆகியவற்றை கேட்டறிந்து தண்ணீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்படுத்திய காய்ந்த சரகுகள் மற்றும் செடிகொடிகளை பொதுப்பணித்துறை அலுவலர்களை கொண்டு உடனடியாக அகற்றிட அறிவுறுத்தினார்.
பின்னர், பட்டுக்கோட்டை ஒன்றியம், தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி வாய்க்கால்களிலும், மதுக்கூர் ஒன்றியம், மன்னங்காடு ஊராட்சியில் த.வடகாடு வாய்க்காலிலும், புன்னங்குன்று ஊராட்சியில் 17/22 கிளை வாய்க்காலிலும், பட்டுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் ராஜாமடம் தாய் வாய்க்காலிலும் விவசாயத்திற்காக கடைமடை வரை தண்ணீர் செல்வதை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் அவர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இவ்வாய்வின் போது பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மகாலெட்சுமி, பொதுப்பணித்துறை கல்லணை கால்வாய்கோட்ட உதவி செயற்பொறியாளர் சண்முகவேல் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.