தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான டாக்டர் கலைஞர் அவர்கள் நேற்று (ஆக 07) செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணிக்கு உடல்நலக் குறைவால் காலமானார்.
இந்நிலையில், திமுக சார்பில் மவுன அஞ்சலி நிகழ்ச்சி, அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இன்று புதன்கிழமை நடத்தப்பட்டது. இதில், திமுகவினர் கருஞ்சட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்துகொண்டனர்.
மேலும், அதிமுக, காங்கிரஸ், தமிழ்மாநில காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மவுன அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். டாக்டர் கலைஞர் மறைவிற்கு திமுக நிர்வாகிகளிடம் தங்களது அனுதாபங்களை தெரிவித்தனர்.
அரைக்கம்பத்தில் திமுக கொடிகள்:
டாக்டர் கலைஞர் மறைவையொட்டி, திமுக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.
அதிராம்பட்டினத்தில் அமைதி ஊர்வலம்:
டாக்டர் கலைஞர் மறைவையொட்டி, அமைதி ஊர்வலம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. ஊர்வலம் அதிரை பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு சேர்மன் வாடி, செக்கடி மேடு, நடுத்தெரு, கடைத் தெரு, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை வழியாக சென்று மீண்டும் பேருந்து நிலையம் வந்தடைந்தது. பின்னர், 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டன. இதில், திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினத்தில் முழு கடையடைப்பு:
டாக்டர் கலைஞர் மறைவையொட்டி, அதிராம்பட்டினத்தில் உள்ள அனைத்து வர்த்தகக் கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டு இருந்தது. பேருந்துகள், டாக்சி, ஆட்டோ, ஆம்னி வாகனங்கள் இயங்கவில்லை. அதிரை பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.