பட்டுக்கோட்டை, ஜன.03
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி, அனைத்துக் கட்சிகள், மாணவா் அமைப்புகள், சமுதாயக் கூட்டமைப்புகள் ஆகியவற்றின் சாா்பில், பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் வெள்ளிக்கிழமை பிற்பகல் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக, அய்யா வழி பாலமுருகன், கோவை செய்யது, பேராயர் ஜோசப் செல்வராஜ், எஸ்.ஆர்.என் செந்தில் குமார் (திமுக), எம்.செந்தில் குமார் (மதிமுக), எஸ்.கந்தசாமி (சிபிஎம்), பக்கிரிசாமி (இந்திய கம்யூனிஸ்ட்), எஸ்.ஆர் ஜவஹர்பாபு (பட்டுக்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர்), டாக்டர் எம்.செல்லப்பன், வழக்குரைஞர் ஆர்.ராமசாமி (காங்கிரஸ்), கே.மகேந்திரன் (காங்கிரஸ் ), கண்ணன் (அமமுக), என்.சக்கரவர்த்தி (விடுதலை சிறுத்தைகள்), சிற்பி சேகர் (திராவிடர் கழகம்), தங்க குமரவேல் (தமிழக மக்கள் விடுதலை இயக்கம்), சுந்தரபாண்டியன் (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்), சதா.சிவக்குமார் (ஆதி திராவிட முன்னேற்ற சங்கம்), பிரகாசம் (வழக்கறிஞர் சங்கத் தலைவர்) உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர்.
ஆர்பாட்டத்தில், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், முத்துப்பேட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்ப பெறக்கோரியும் முழக்கமிட்டனர்.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பட்டுக்கோட்டை பெரிய கடைத்தெரு, சின்னையா தெரு, பழனியப்பன் தெரு, பெரிய மார்க்கெட், அறந்தாங்கி சாலை, சாமியார் ரோடு, அதிராம்பட்டினம் மற்றும் முத்துப்பேட்டை சாலைகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
ஆர்ப்பாட்டத்திற்கு சமுதாயக் கூட்டமைப்புகள் ஒருங்கிணைப்பாளர் எச்.உமர் தலைமை வகித்தார். பீர் முகமது வரவேற்றுப் பேசினார். நிறைவில் சாகுல் ஹமீது நன்றி கூறினார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி, அனைத்துக் கட்சிகள், மாணவா் அமைப்புகள், சமுதாயக் கூட்டமைப்புகள் ஆகியவற்றின் சாா்பில், பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் வெள்ளிக்கிழமை பிற்பகல் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக, அய்யா வழி பாலமுருகன், கோவை செய்யது, பேராயர் ஜோசப் செல்வராஜ், எஸ்.ஆர்.என் செந்தில் குமார் (திமுக), எம்.செந்தில் குமார் (மதிமுக), எஸ்.கந்தசாமி (சிபிஎம்), பக்கிரிசாமி (இந்திய கம்யூனிஸ்ட்), எஸ்.ஆர் ஜவஹர்பாபு (பட்டுக்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர்), டாக்டர் எம்.செல்லப்பன், வழக்குரைஞர் ஆர்.ராமசாமி (காங்கிரஸ்), கே.மகேந்திரன் (காங்கிரஸ் ), கண்ணன் (அமமுக), என்.சக்கரவர்த்தி (விடுதலை சிறுத்தைகள்), சிற்பி சேகர் (திராவிடர் கழகம்), தங்க குமரவேல் (தமிழக மக்கள் விடுதலை இயக்கம்), சுந்தரபாண்டியன் (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்), சதா.சிவக்குமார் (ஆதி திராவிட முன்னேற்ற சங்கம்), பிரகாசம் (வழக்கறிஞர் சங்கத் தலைவர்) உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர்.
ஆர்பாட்டத்தில், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், முத்துப்பேட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்ப பெறக்கோரியும் முழக்கமிட்டனர்.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பட்டுக்கோட்டை பெரிய கடைத்தெரு, சின்னையா தெரு, பழனியப்பன் தெரு, பெரிய மார்க்கெட், அறந்தாங்கி சாலை, சாமியார் ரோடு, அதிராம்பட்டினம் மற்றும் முத்துப்பேட்டை சாலைகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
ஆர்ப்பாட்டத்திற்கு சமுதாயக் கூட்டமைப்புகள் ஒருங்கிணைப்பாளர் எச்.உமர் தலைமை வகித்தார். பீர் முகமது வரவேற்றுப் பேசினார். நிறைவில் சாகுல் ஹமீது நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.