.

Pages

Sunday, January 5, 2020

காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா ~ ஆண்டு விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.05
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 38-வது விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நிகழ்ச்சி காதிர் முகைதீன் கல்லூரி அரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

விழாவிற்கு, பள்ளித்தாளாளர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் வி.குமார் கலந்துகொண்டு பேசிய உரையில்;
இறைவன் அனைவருக்கும் சம எடையுள்ள மூளையை வழங்கி இருக்கிறான். அதேபோல் அனைவருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் வழங்கி இருக்கிறான். நமக்கு கொடுத்த மூளையையும், கிடைத்த நேரத்தையும் எவன் ஒருவன் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறானோ அவன் வாழ்கையில் வெற்றி பெற்றவனாக இருக்கிறான். இவற்றை எவன் ஒருவன் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ அவன் வாழ்கையில் தோல்வி அடைந்து முடங்கிப் போய்விடுகிறான். நம்மிடம் உள்ள ஆற்றலை வெளிக்கொணரக் கூடியதற்கான மிகப்பெரும் உந்துசக்தி நம்மிடம் மட்டுமே உள்ளது. அதை பயன்படுத்திக் கொள்ளுவதற்கான பட்டறைதான் இந்த பள்ளிக்கூடங்கள். இந்த பட்டறையில் இருக்கக்கூடிய வார்ப்பாளர்கள்தான் ஆசிரியர்கள். இங்கு கல்வியை பயிற்றுவிக்கும் எந்தவொரு ஆசிரியரும் தன்னுடைய அறிவை கொடுத்து தன்னுடைய மாணவன் புத்திசாலியாக வேண்டுமென நினைக்கக்கூடிய ஒரு ஒப்பற்ற ஜீவன் உலகத்தில் ஆசிரியர் ஒருவர் மட்டும்தான்.

வளர்ந்து இருக்கக்கூடிய அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சி என்பது ஆசிரியர்களையும், அதிகாரிகளையும் மிஞ்சி, குழந்தைகளிடம் அதிகமாக ஊடுருவி வேறு திசைகளில் மாற்றிக்கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் எங்களிடம் பீடித்திருக்கிறது. எனவே, உங்களது அறிவு என்பது தற்போது வளர்ந்திருக்கக்கூடிய அறிவியல் தொழில்நுட்பம் சிதைந்துவிடுவதற்கான சக்தியாக இருந்துவிடக்கூடாது. இன்றைக்கு செல்போன், தொலைக்காட்சி உள்ளிட்ட திசை திருப்பக்கூடிய  சக்திகள் அதிகமாக இருப்பதால், புறசக்திகள் நம்மை வீட அதிகமாக கவர்வதால், நீங்கள் அவற்றிலிருந்து விடுபட்டு உங்களிடமிருக்கும் மிகச்சிறந்த ஆற்றல் சிதைவடையாமல், மனச்சிதறல் இல்லாமல், கவனச்சிதறல் இல்லாமல், திசை மாற்றமில்லாமல், எந்தவிதமான தடுமாற்றமில்லாமல் நீங்கள் நேர்கொண்ட பார்வையை உங்களது வாழ்க்கையை வெற்றிநடை போடுவதற்கு தீர்மானித்துவிட்டீர்கள் என்றால் உங்களை அசைப்பதற்கு எந்தவொரு சக்தியும் இல்லை. எனவே, நல்ல கல்வியும், நல்லொழுக்கமும் இருந்தால் மட்டுமே நாடு நம்மை பார்க்கும். நீங்கள் எண்ணிய எண்ணங்களை அடைவதற்கு உங்களுடைய இடைவிடாத முயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கை ஆகியவை இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்' என்றார்.

சிறப்பு விருந்தினராக, தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் எம்.இராமகிருட்டிணன், கல்வியில், விளையாட்டில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு கேடயப்பரிசுகள் வழங்கிப் பாராட்டிப் பேசினார். மேலும், பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் ஆர்.ஜெயபால், காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக, பள்ளித் தலைமை ஆசிரியை எம்.சுராஜ் பள்ளி நிகழ்த்திய சாதனைகளை பட்டியலிட்டு ஆண்டறிக்கையாக வாசித்தார். பள்ளி உடற்கல்வி ஆசிரியை ஜி.அகிலா விளையாட்டு ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி ஆசிரியை கே.அனுராதா வரவேற்றுப் பேசினார். நிறைவில், பள்ளி ஆசிரியை எஸ்.அமுதா நன்றி கூறினார்.

இவ்விழாவில், பள்ளி மாணவிகளின் பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், பள்ளி ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.