.

Pages

Saturday, January 25, 2020

CAA, NPR, NRC ஐ எதிர்த்து தஞ்சையில் பிரமாண்ட பேரணி (படங்கள்)

தஞ்சாவூர், ஜன.25
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை மாவட்டம் சார்பில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) வாபஸ் பெறக் கோரியும், தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.), தேசிய குடியுரிமை பதிவேடு (என்.ஆர்.சி.) ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும், இச்சட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றக் கூடாது என தமிழக அரசை வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியரகத்தை நோக்கி பேரணி இன்று 25.01.2020 சனிக்கிழமை நடைபெற்றது

பேரணிக்கு அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை கே.ராஜிக் முகமது தலைமை வகித்தார். அவ்வமைப்பின், மாவட்டச் செயலாளர் வல்லம் பாட்சா, மாவட்ட பொருளாளர் எம்.அஸ்ரப் அலி, மாவட்ட துணைச் செயலாளர் எம்.ஐ அப்துல்லா, மாவட்ட மருத்துவ அணி பொறுப்பாளர் எம்.ஹாஜா அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அவ்வமைப்பின் மாநில துணைத்தலைவர் ப. அப்துல் ரஹ்மான் கண்டன உரை நிகழ்த்தினார்.

பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்தப் பேரணியில் தஞ்சை புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு டேன்டெக்ஸ் ரவுண்டான வழியாக மாவட்ட ஆட்சியரக அலுவலகம் நோக்கி, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்ப பெறக்கோரி கையில் தேசியக்கொடிகளை ஏந்தியவாறு, முழக்கமிட்டு சென்றனர். நிறைவில், தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் முகமது பாருக் நன்றி கூறினார்.


 














 
 
 
 




No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.