.

Pages

Sunday, January 5, 2020

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.05
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 70-வது ஆண்டு விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

விழாவிற்கு, பள்ளித்தாளாளர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினர்களாக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் வி.குமார், தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் எம்.இராமகிருட்டிணன் ஆகியோர் கலந்துகொண்டு கல்வியில், விளையாட்டில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் பாடப்பிரிவுகளில் 100% தேர்ச்சி விகிதத்தை பெற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் ஆகியோருக்கு கேடயப்பரிசுகள் வழங்கிப் பாராட்டி பேசினர்.

மேலும், சிறப்பு விருந்தினர்களாக, பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் ஆர்.ஜெயபால், காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக, பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸ்ரப் அலி பள்ளி நிகழ்த்திய சாதனைகளை பட்டியலிட்டு ஆண்டறிக்கையாக வாசித்தார். பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் எஸ்.நாகராஜன் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் பள்ளி ஆசிரியர் எம்.உமர் பாருக் தொகுத்தளித்தார். நிறைவில், பள்ளி ஆசிரியர் எஸ்.குணசேகரன் நன்றி கூறினார். இவ்விழாவில், விழாவில், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.