அதிராம்பட்டினம், ஜன.26
அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் இந்திய 71-வது குடியரசு தின விழா பேரணி ~ கொடியேற்றும் நிகழ்ச்சி அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இன்று (26-01-2020) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம் முகமது அபூபக்கர் தலைமை வகித்து, இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அவ்வமைப்பின் செயலாளர் ஹாஜி எம். நெய்னா முகமது அனைவரையும் வரவேற்று, குடியரசு தின உறுதிமொழியை வாசித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மவ்லவி. எம்.எச் முகமது இப்ராஹீம், பட்டிமன்ற பேச்சாளர் அண்ணா சிங்காரவேலு, தங்க குமரவேல் ஆகியோர் கலந்துகொண்டு குடியரசு தின விழா உரை நிகழ்த்தினர். நிறைவில், பி.ஜமாலுதீன் நன்றி கூறினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
முன்னதாக, அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம பஞ்சாயத்தார்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஊர் பிரமுகர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட பேரணி, அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் அருகில் இருந்து புறப்பட்டு கிழக்கு கடற்கரைச்சாலை வழியாக பேருந்து நிலையம் வந்தடைந்தது. இதில், அனைவரும் இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியும், சட்டையில் அணிந்துகொண்டும் அமைதியாகச் சென்றனர்.
அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் இந்திய 71-வது குடியரசு தின விழா பேரணி ~ கொடியேற்றும் நிகழ்ச்சி அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இன்று (26-01-2020) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம் முகமது அபூபக்கர் தலைமை வகித்து, இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அவ்வமைப்பின் செயலாளர் ஹாஜி எம். நெய்னா முகமது அனைவரையும் வரவேற்று, குடியரசு தின உறுதிமொழியை வாசித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மவ்லவி. எம்.எச் முகமது இப்ராஹீம், பட்டிமன்ற பேச்சாளர் அண்ணா சிங்காரவேலு, தங்க குமரவேல் ஆகியோர் கலந்துகொண்டு குடியரசு தின விழா உரை நிகழ்த்தினர். நிறைவில், பி.ஜமாலுதீன் நன்றி கூறினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
முன்னதாக, அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம பஞ்சாயத்தார்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஊர் பிரமுகர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட பேரணி, அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் அருகில் இருந்து புறப்பட்டு கிழக்கு கடற்கரைச்சாலை வழியாக பேருந்து நிலையம் வந்தடைந்தது. இதில், அனைவரும் இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியும், சட்டையில் அணிந்துகொண்டும் அமைதியாகச் சென்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.