.

Pages

Sunday, January 19, 2020

கால்பந்து போட்டியில் சாதனை நிகழ்த்திய அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் FC ஜூனியர், சீனியர் அணிகளுக்குப் பாராட்டு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.19
கோவை புலியகுளம் கால்பந்து கழகம் சார்பில், 20 ஆம் ஆண்டு, பி.எப்.சி., கோப்பைக்கான ஐவர் கால்பந்து போட்டி, புனித அந்தோணியார் பள்ளி மைதானத்தில், பொது, 17 மற்றும் 19 வயதுக்குட்டோர் என மூன்று பிரிவுகளில் நடைபெற்றது. இதில், 19 வயதுக்குட்பட்டோருக்கான லீக் போட்டியில், கேரளா, சென்னை, கோவை, காரைக்குடி, தஞ்சாவூர், தூத்தூர், போத்தனூர், ஈரோடு, ஊட்டி உள்பட மொத்தம் 18 அணிகள் கலந்துகொண்டு விளையாடின.

இந்நிலையில், அரையிறுதி ஆட்டத்தில் கோவை பி.எப்.சி அணியும், அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் எப்.சி அணியும் மோதின. அதிராம்பட்டினம் எப்.சி அணியில், ஆதில் (கேப்டன்), அன்சர்கான் (கோல் கீப்பர்), சதாஸ்கான், அன்சர்கான், பக்கர், நவீத், ரியாவுதீன், நிஷாருதீன், இர்ஃபான், ரிஸ்வான் ஆகிய வீரர்கள் கலந்துகொண்டு விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இறுதியில், 2-1 என்ற கோல் கணக்கில், அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் எப்.சி அணி மூன்றாமிடம் பிடித்தது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில், கோப்பை, சான்றிதழ் பரிசுகள் வழங்கப்பட்டன. தவிர, தொடர் போட்டியில் அதிக முறை கோல் அடித்த வீரருக்கான சிறப்புப் பரிசு மற்றும் கேடயப்பரிசினை அணியின் வீரர் சதாஸ்கான் பெற்றார்.

அதேபோல், ஒரத்தநாடு ஒய்.பி.ஆர் கால்பந்து கழகம் சார்பில், ஐவர் கால்பந்து போட்டி, ஒரத்தநாட்டில் நடைபெற்றது. இதில், 13 வயதுக்குட்பட்டோருக்கான லீக் போட்டியில், திருச்சி, ஒரத்தநாடு, மன்னார்குடி, பாப்பாநாடு, கரம்பயம், அதிராம்பட்டினம் ஆகிய அணிகள் கலந்துகொண்டு விளையாடின.

இந்நிலையில், கடந்த (ஜன.17) வெள்ளிக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில், ஒரத்தநாடு ஒய்.பிஆர் அணியும், அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் எப்.சி அணியும் மோதின. அதிராம்பட்டினம் எப்.சி ஜூனியர் அணியில், ஹமீது, ஆதில், சுஹைல் (கேப்டன்), ஷாஃபி (கோல் கீப்பர்), மஃப்ரூக், அராஃபத், உஜைர் ஆகிய வீரர்கள் கலந்துகொண்டு விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இறுதியில், இரு அணிகளும் கோல் ஏதும் போடாமல் சமநிலை அடைந்தனர். பின்னர், ட்ரை பிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டன. இறுதியில், ஒரத்தநாடு ஒய்.பிஆர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில், ரன்னர் பட்டத்தை தட்டிச்சென்ற அதிராம்பட்டினம் எப்.சி ஜூனியர் அணிக்கு, கோப்பையை பரிசாக வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அதிராம்பட்டினம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த பாராட்டு விழாவில் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வெஸ்டர்ன் எப்.சி ஜூனியர், சீனியர் அணி வீரர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.