★புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள் !★
(இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா)
புத்தாண்டுக் கொண்டாட்டம் பொன்மணிகள் மஞ்சலுடன்
புத்துணர்வுப் பூக்களாம் பொங்கல் மகிழ்ச்சியுள் !
குத்தும்கொம் பையடக்கும் கோமகன் நற்றமிழன் !
வித்தைகள் வென்றொழிக்கும் வீரநடை யாட்டங்கள்
அத்தனையும் சொத்துக்கள் அன்புவீரம் ஊற்றினில்
முத்துப் பவள முகமலர்ச்சி கொண்டிங்கே
சத்தியச் சோதனை சாதகமாய் மாற்றிவிடும்
வித்தகன் வேற்றுமையை வேரொடு சாய்ப்பவன் !
தந்திர மெல்லாம் தகர்க்கும் திறன்மிக்க
மந்திரம் முன்னோர்கள் மான்பளர் சேகரித்த
விந்தை விளக்கம் வெகுவான நற்பண்பு
தந்தவழிக் கொள்கைத் தகுதி யுரமேற்றி
வந்ததிந்த வர்க்கம் ! வளர்ந்ததன் நல்லுள்ளம் !
பந்தபாசம் நீதியின் பார்வைக்கே நின்றாளும் !
அந்தமாதி சைவநெறி யவ்வழித் தன்மையிலே
சொந்தம் விடாது சுகம்தழைக்க நாடுவான் !
கோடுகள் போட்டெங்கும் கூர்மை விதிகளை
நாடுகள் உண்டாக்கி நாற்புறமும் வேலிகள் !
பாடும் யாதுமூரே பாட்டாலே தன்னுள்ளம்
தேடும் மனிதங்கள் திக்கெங்கும் உண்டாக
வீடெது? யென்றான் விளங்கவே வேண்டுமென்றான் !
மேடுகள் பள்ளங்கள் மேன்மையாக வாகவும்
காடுகள் வாழ்வீடாய்க் காட்டும் மதிகளுக்கு
போடும் அறிவியல் போதனை தானே !
ஷேக் அப்துல்லாஹ் அ.
அதிராம்பட்டினம்.
(இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா)
புத்தாண்டுக் கொண்டாட்டம் பொன்மணிகள் மஞ்சலுடன்
புத்துணர்வுப் பூக்களாம் பொங்கல் மகிழ்ச்சியுள் !
குத்தும்கொம் பையடக்கும் கோமகன் நற்றமிழன் !
வித்தைகள் வென்றொழிக்கும் வீரநடை யாட்டங்கள்
அத்தனையும் சொத்துக்கள் அன்புவீரம் ஊற்றினில்
முத்துப் பவள முகமலர்ச்சி கொண்டிங்கே
சத்தியச் சோதனை சாதகமாய் மாற்றிவிடும்
வித்தகன் வேற்றுமையை வேரொடு சாய்ப்பவன் !
தந்திர மெல்லாம் தகர்க்கும் திறன்மிக்க
மந்திரம் முன்னோர்கள் மான்பளர் சேகரித்த
விந்தை விளக்கம் வெகுவான நற்பண்பு
தந்தவழிக் கொள்கைத் தகுதி யுரமேற்றி
வந்ததிந்த வர்க்கம் ! வளர்ந்ததன் நல்லுள்ளம் !
பந்தபாசம் நீதியின் பார்வைக்கே நின்றாளும் !
அந்தமாதி சைவநெறி யவ்வழித் தன்மையிலே
சொந்தம் விடாது சுகம்தழைக்க நாடுவான் !
கோடுகள் போட்டெங்கும் கூர்மை விதிகளை
நாடுகள் உண்டாக்கி நாற்புறமும் வேலிகள் !
பாடும் யாதுமூரே பாட்டாலே தன்னுள்ளம்
தேடும் மனிதங்கள் திக்கெங்கும் உண்டாக
வீடெது? யென்றான் விளங்கவே வேண்டுமென்றான் !
மேடுகள் பள்ளங்கள் மேன்மையாக வாகவும்
காடுகள் வாழ்வீடாய்க் காட்டும் மதிகளுக்கு
போடும் அறிவியல் போதனை தானே !
ஷேக் அப்துல்லாஹ் அ.
அதிராம்பட்டினம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.