.

Pages

Thursday, January 30, 2020

CAA, NPR, NRC க்கு எதிராக அதிராம்பட்டினத்தில் பிரமாண்ட பெண்கள் மாநாடு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.30
சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) கட்சியின் சார்பில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றிற்கு எதிராக பெண்கள் மாநாடு அதிராம்பட்டினம் ஜாவியா அருகில் இன்று (30-01-2020) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

மாநாட்டிற்கு, எஸ்.டி.பி.ஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என். முகமது புஹாரி தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் அனைத்து மஹல்லா நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் எம்.நிஜாம் முகைதீன், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் மவ்லவி. ஹாபிழ் எம்.ஏ ஷவ்கத் அலி உஸ்மானி, நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பின் மாநில செயலாளர் எம்.தஸ்லீமா, எஸ்.டி.பி.ஐ கட்சி மாநிலச் செயலாளர் என். சஃபியா ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

மாநாட்டில், இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்ப பெற வேண்டும், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி நடத்தப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றிற்கு எவ்வித தகவல் மற்றும் ஆவணங்களை அளிக்காமல் ஒத்துழையாமையை கடைபிடிப்பது எனவும், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றிற்கு எதிராக போராடி வரும் பெண்கள், மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் மீது காவல்துறையை ஏவிவிட்டு தாக்குதல் நடத்தி ஜனநாயக விழுமியங்களை தகர்த்தெறிந்து வரும் மத்திய, மாநில அரசுகளை வன்மையாகக் கண்டிப்பது, அறவழியில் போராடுபவர்கள் மீது பதியப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், வெகுஜன மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஏனைய மாநிலங்களில் தடை செய்ததைப் போல், தமிழகத்திலும் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை அமல்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். அகமது அஸ்லம் வரவேற்றுப் பேசினார். வழக்குரைஞர் இசட். முகமது தம்பி நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார். நிறைவில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் என்.எம்.எஸ் ஷாஃபிர் அகமது நன்றி கூறினார்.

மாநாட்டின் இடையே, சி.எப்.ஐ அமைப்பின் விதைகள் கலைக்குழுவினர் மற்றும் மாநாட்டில் பங்கேற்ற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும் தங்கள் செல்லிடப்பேசியில் விளக்கை எரியவிட்டு முழக்கமிட்டனர்.




No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.