.

Pages

Monday, January 27, 2020

தலைக்கவசம் அணிவது பற்றிய குறும்பட விழிப்புணர்வு போட்டி ~ பரிசளிப்பு (படங்கள்)

தஞ்சாவூர், ஜன.27
தஞ்சை சரக காவல் எல்லைக்கு உட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை சார்ந்த இளைய தலைமுறையினர் பங்குபெறும் தலைக்கவசம் அணிவது பற்றிய குறும்பட விழிப்புணர்வு போட்டி தஞ்சாவூர் தீர்க்க சுமங்கலி மகால் திருமண மண்டபத்தில் 24.01.2020 அன்று நடைபெற்றது.

தஞ்சாவூர் சரக காவல் துணைத் தலைவர் ஜெ.லோகநாதன், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ் மகேஸ்வரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

போட்டியில் 20 குறும்படங்கள் பங்கேற்றன, இதில், தஞ்சாவூர் புதுக்கோட்டை ரோடு, ராயல் ரிச்சர்ட் என்பவரின் 'விதிமீறல்' என்ற குறும்படம் சிறந்த குறும்படமாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், தஞ்சாவூர், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சாய் சதோக் என்பவரின் குறும்படம் இரண்டாவது பரிசாக ரூ.5 ஆயிரமும், மயிலாடுதுறை மதியரசு குழுவினரின் 'பொய்க்கவசம்' குறும்படம் மூன்றாம் பரிசாக ரூ.3 ஆயிரமும், மேலும், அருண்பிரசாத் (மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி) குழு மாணவர்களின் Head Weight, குறும்படம், சுகுமாரன் (திருவாரூர் திரு.வி.க. கல்லூரி) என்பவரின் Life Saver குறும்படம், யஷ்வந்த்ராஜ் (கும்பகோணம் கே.எஸ்.கே பொறியியல் கல்லூரி) ஆகியோருக்கு தலா ரூ. ஆயிரம் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. இப்புதுமையான முயற்சி பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பையும் தலைகவசம் அணிவதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.