.

Pages

Wednesday, January 15, 2020

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக்கூட்டம் (படங்கள்)

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 74-வது மாதாந்திரக்கூட்டம் கடந்த 10-01-2020 அன்று பத்ஹா RT-RESTUARENT முதல் மாடியில் நிஜாமுதீன் அவர்களின் இல்லத்தில் இனிதே நடைபெற்றது. இக்கூட்டத்தில், நமதூர்வாசிகள்  பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராஅத்                 :  N. அபூபக்கர் (பொருளாளர் )
முன்னிலை           : S. சரபுதீன் (தலைவர் )
வரவேற்புரை       :  P. இமாம்கான் (கொள்கை பரப்பு செயலாளர் )           :  சிறப்புரை:               A.M அஹமது ஜலீல் (செயலாளர் )
நன்றியுரை      : A. சாதிக் அகமது  (இணைத்தலைவர்)

தீர்மானங்கள்:
1) அதிரை பைத்துல்மால் நிர்வாகத்தில் என்னென்ன செயல்பாடுகள் மற்றும் தொடர் சேவைகள் அல்லாஹ்விற்காக செய்து வருகிறார்கள் என்பதை விரிவாகவும, நமதூர் வாசிகள் கேட்ட கேள்விகளுக்கும் நிதானமாக விளக்கங்கள் அளிக்கப்பட்டது. 74-வது கூட்டம் சிறப்பு கூட்டமாக அமைந்தது, இதில் பல்வேறு கோணங்களில் பல்வேறு தரப்பு கேள்விகளுக்கு அவர்கள் நிறைவு அடையும் படி விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

2) பென்ஷன்தாரர்களுக்கு பென்ஷன் எந்த அடிப்படையில் கொடுக்கப்படுகிறது என்பதை விளக்கப்பட்டது. பென்சன்  தாரர்களுக்கு உதவ ரியாத் மாநகரில் புதிதாக சேர்ப்பதற்கு முயற்சிகள் எடுத்ததின் விளைவாக இதுவரை -26 நபர்கள்  தங்களின் பெயர்களை பதிவு செய்த அனைவருக்கும் அல்லாஹ் மேலும் இரண- பரக்கத்தை மேலும் அபிவிருத்தி செய்ய துஆ செய்யப்பட்டது. மேலும், பென்ஷன் சம்பந்தமான விளக்கங்கள் தலைமையகத்தில் இருந்து வந்த கடிதத்தை P. இமாம்கான் அவர்களால் வாசிக்கப்பட்டு அதற்குரிய பதில்களையும் விளக்கங்களையும் விரிவாக அனைவருக்கும் புரிந்து கொள்ளும்படி எடுத்து சொல்லப்பட்டது.

3) அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை செயல்பாடுகள் இன்னும் சிறந்து விளங்கிடவும், வலிமையோடும், மேலும் திறமையாக செயல்பட கூடுதலாக புதிதாக 3- பொறுப்புகளை, கீழ்காணும் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டது.

01.நிஜாமுதீன் - ஆலோசகர் ( புதிய பொறுப்பு )
02. ஜம்சித் அஹமது - இணை பொறுளாளர் ( காலி இடம் பூத்தி செய்யப்பட்டது )
03. நெய்னா முஹம்மது – ஒருங்கிணைப்பாளர் ( புதிய பொறுப்பு )
அதிரை பைத்துல்மால்  ரியாத் கிளை மென்மேலும் சிறந்து விளங்கிட பாடுபடுவோம் என்று அல்லாஹ்வுக்காக உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

4) சமீபத்தில் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்ற அனைத்து முஹல்லா  கூட்டமைப்பு அணைத்து தெருவாசிகள் சேர்ந்து ஊர், மற்றும் சமுதாய நலம் கருதி சம்பந்தமாக கூட்டம் நடத்தியமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு  முழு வெற்றியடைய துவா செய்யப்பட்டது

5) அதிரையில் சமீபத்தில் வபாத்தான:  மர்ஹும். ஹாஜா முகைதீன் (அமா டிராவல்ஸ்),  மர்ஹும்.-மஜ்பா ஹாஜி எம்.ஏ அஸ்ரப் அலி. மற்றும் மர்ஹும். S.A.K கமாலுத்தீன் அவர்களுக்காக துவா செய்யப்பட்டு ஆழ்ந்த இரங்கள் தெரிவிக்கப்பட்டது.

6) இன்ஷா அல்லாஹ் வரும் அமர்வு FEBRUARY 2020 14-ம் தேதி பத்ஹா RT- RESTUARENT முதல் மாடியில் மஃரிப்  தொழுகை முடிந்த பிறகு நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டு நமதூர் வாசிகள் அனைவர்களும் முழு ஒத்துழைப்பு தந்து அல்லாஹ்வின் பொருத்தத்துடன் இந்த சேவையை சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணை செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

1 comment:

  1. சேவைகள் மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !(அபுல் ஹைர் . சரபுதீன் , நிஜாம் இவர்களின் உறவுக்காரர் )

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.