.

Pages

Thursday, January 9, 2020

ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.09
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், புதுக்கோட்டை உள்ளூர் ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டு 15 பானைகளில் பொங்கல் வைத்து உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

விழாவையொட்டி, பள்ளி மாணவர்களின் பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும், பள்ளி மாணவர்கள் பங்கேற்று, இயற்கை விவசாயம், தமிழரின் பாரம்பரிய உணவு, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா்.

பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், பானை உடைத்தல், கோலம் போடுதல், சைக்கிள் ரேஸ் ஆகிய போட்டிகளில் வென்றவர்களுக்கு பள்ளித் தாளாளர் என். உதயகுமார் பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்

முன்னதாக, பள்ளிச்செயலர் மகாலட்சுமி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். விழாவில், சிறப்பு விருந்தினர்களாக பட்டுக்கோட்டை வட்டாரக் கல்வி அலுவலர் எஸ்.சிவசாமி, சேதுபாவாசத்திரம் வட்டாரக் கல்வி அலுவலர் எம்.கே இராமமூர்த்தி, காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், மழவேனிற்காடு  ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.ராமச்சதிரன், பட்டுக்கோட்டை லிட்டில் பிளவர் நர்சரி பள்ளித்தாளாளர் கிரிராஜன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். நிறைவில், பள்ளி முதுகலை ஆசிரியர் சுதாகர் நன்றி கூறினார்.
 

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.