அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை ஊராட்சி தலைவர், உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா ஊராட்சி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.
இதில், ஏரிப்புறக்கரை ஊராட்சி தலைவராக எஸ்.சக்திவேல் புதிதாக பதவி ஏற்றுக்கொண்டார். அதேபோல், பிலால் நகர் 1-வது வார்டு கவுன்சிலராக ஜாஸ்மின் பானு (எம்.ஆர் கமாலுதீன்), எம்.எஸ்.எம் நகர் 2-வது வார்டு கவுன்சிலராக ரஹ்மத் (எஸ். முகமது தமீம்) ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து, புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட இவர்கள் அனைவருக்கும் பிலால் நகர் ஜமாத் மற்றும் எம்.எஸ்.எம் நகர் ஜமாத் சார்பில், சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும், சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு மூன்றாமிடம் பிடித்த அதிரை அமீன் என்கிற ஏ.முகமது அமீன் இந்நிகழ்வில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில்,
பிலால் நகர் ஜமாத் சார்பில்...
ஹாஜி எஸ்.எம்.ஏ அகமது கபீர், எஸ்.முகமது முகைதீன், அஸ்ரப் அலி, எம்.நிஜாமுதீன், அதிரை அமீன், முகமது, இஜாஸ் அகமது, சேக்தாவூது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எம்.எஸ்.எம் நகர் ஜமாத் சார்பில்...
இ.வாப்பு மரைக்காயர், முகமது வலீத், பிஸ்மில்லாக்கான், அல் அமீன், அப்துல் வஹாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Congratulations.
ReplyDeleteவெற்றி பெற்றவர்கள் முஹல்லா வாரியாக ஊர் குறைகளை கேட்டறிந்து விபரமறியாத சில இல்லத்தரசிகளிடம் சில அறிவுறைகளை கூறி குறிப்பாக , முன் பின் தெரியாத யாரிடமும் எந்த விபரமும் தெறிவிக்க வேண்டாம் என்று வளியுருத்தவும் சமீபகாலமாக சில ஊர்களில் 2 போலீஸ் துணையுடன் குடும்ப உறுப்பினர்களிடம் மிரட்டி கையெலுத்து வாங்குதாக சமூக வலைதலங்களில் வதந்தி உலா ! கொஞ்சம் ஊர் நலன் கருதி செயல்படவும் ! உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு மெம்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் !
ReplyDelete