தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் பட்டுக்கோட்டை வி.பி.எஸ் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை கே.ராஜிக் முகமது தலைமை வகித்தார். அவ்வமைப்பின், மாவட்டச் செயலாளர் வல்லம் பாட்சா, மாவட்ட பொருளாளர் எம்.அஸ்ரப் அலி, மாவட்ட துணைச் செயலாளர் எம்.ஐ அப்துல்லா, மாவட்ட மருத்துவ அணி பொறுப்பாளர் எம்.ஹாஜா அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக, அவ்வமைப்பின் மாநிலச் செயலாளர்கள் அன்சாரி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டு, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றின் பாதிப்புகள் பற்றி எடுத்துரைத்தனர்.
கூட்டத்தில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்ப பெறக்கோரி எதிர்வரும் (25.01.2020) அன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபெரும் பிரமாண்ட பேரணியில் பொதுமக்கள் அதிகமானோரை பங்கேற்க வைப்பது, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் எனவும், இச்சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெரும் வரை அடுத்தடுத்து போராட்டங்கள் தொடரும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், அவ்வமைப்பின் 100 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.