பட்டுக்கோட்டை, ஜன.11
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பட்டுக்கோட்டை ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 19 பேர், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த (ஜன.06) திங்கட்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், பட்டுக்கோட்டை ஒன்றியம் 4-வது வார்டில் வென்ற, தி. பழனிவேல் (தி.மு.க) தலைவராகவும், 3-வது வார்டில் வென்ற, லெ. முருகானந்தம் (தி.மு.க) துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து, அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம், திமுக ஒன்றிய பிரதிநிதி ஏ.எம் அப்துல் ஹலீம், என்.ஏ முகமது யூசுப், ஜாஹிர் உசேன் உள்ளிட்ட பலர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பட்டுக்கோட்டை ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 19 பேர், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த (ஜன.06) திங்கட்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், பட்டுக்கோட்டை ஒன்றியம் 4-வது வார்டில் வென்ற, தி. பழனிவேல் (தி.மு.க) தலைவராகவும், 3-வது வார்டில் வென்ற, லெ. முருகானந்தம் (தி.மு.க) துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து, அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம், திமுக ஒன்றிய பிரதிநிதி ஏ.எம் அப்துல் ஹலீம், என்.ஏ முகமது யூசுப், ஜாஹிர் உசேன் உள்ளிட்ட பலர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.