.

Pages

Monday, January 20, 2020

அதிராம்பட்டினம் ரிச்வே கார்டனில் ரயில் உபயோகிப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம்!

அதிராம்பட்டினம், ஜன. 20
ரயில் உபயோகிப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் அதிராம்பட்டினம் ரிச்வே கார்டனில் 19-01-2020 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்பாளர்கள் நலச்சங்கத் தலைவர் என்.ஜெயராமன் தலைமை வகித்தார். சங்க ஆலோசகர் ஹாஜி ஏ. அப்துல் ரெஜாக், சங்க ஒருங்கிணைப்பாளர் ஹாஜி எம்.எஸ்.எம் ராஃபியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக, தென்னக ரயில்வே சேலம் கோட்ட வர்த்தக உதவி மேலாளர் (ஓய்வு) எம்.ஷாஜஹான் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

கூட்டத்தில், எதிர்வரும் ஜன.28ந் தேதி பாராளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் (தஞ்சை), கே.நவாஸ்கனி (இராமநாதபுரம்). எம். செல்வராஜ் (நாகை), எஸ்.திருநாவுக்கரசர் (திருச்சி) ஆகியோர் தலைமையில், தென்னக ரயில்வே திருச்சி கோட்ட வர்த்தக மேலாளரை சந்திப்பது எனவும், காரைக்குடி ~ திருவாரூர் வழித்தடத்தில் அதிராம்பட்டினம் வழியாக சென்னைக்கு உடனடியாக விரைவு ரயில் இயக்குதல், திருவாரூா் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி வழித்தடத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு கேட்கீப்பா்கள், பணியாளா்கள் நிரப்ப வேண்டும். அவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்களிடம் முன்வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், அதிராம்பட்டினம் நஜ்முதீன், எஸ்.ஜெ அப்துல் ஜலீல், முத்துப்பேட்டை சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா), பட்டுக்கோட்டை எம்.கலியபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிறைவில், சங்க செயலாளர் வ.விவேகானந்தன் நன்றி கூறினார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.