.

Pages

Friday, January 10, 2020

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அதிராம்பட்டினத்தில் கண்டன பொதுக்கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.10
நாம் மனிதர் கட்சியின் சார்பில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.ஏ சரபுதீன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், அவ்வமைப்பின் நிறுவனத்தலைவர் எஸ்.தவ்ஃபிக், நாம் தமிழர் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஏ.ஜெ ஜியாவுதீன், காங்கிரஸ் கட்சி விவசாயப்பிரிவு மாநிலச் செயலாளர் சேக் பரீத், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் வழக்குரைஞர் சே. பசும்பொன் பாண்டியன், தமிழக மக்கள் விடுதலை இயக்க மாநில பொதுச்செயலாளர் தங்க குமரவேல், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மாநிலச் செயலாளர் நெல்லை நயினார் முகமது, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அருண்ஷோரி ஆகியோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர். முன்னதாக அவ்வமைப்பின் நூருல்லா வரவேற்றார். நிறைவில், அப்துல் ஹமீத் நன்றி கூறினார்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.