.

Pages

Wednesday, January 15, 2020

அதிராம்பட்டினம் வழியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்குவதில் தாமதம்: சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு!

அதிராம்பட்டினம், ஜன.15
அதிராம்பட்டினம் வர்த்தகர்கள், ரெயில் உபயோகிப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற கலந்தாலோசனைக்கூட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெருவில் இன்று (15-01-2020) புதன்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை நிறுவனத் தலைவர் மு.க.செ அகமது அலி ஜாஃபர் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், மயிலாடுதுறை ~ காரைக்குடி இடையே அகல ரெயில்பாதை பணிக்காக, சென்னையிலிருந்து மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி வழியாக காரைக்குடி வரையில் மீட்டர் கேஜ் பாதையில் இயங்கி வந்த கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 2006 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

அகல ரெயில் பாதை பணியை விரைவாக முடிக்கவும், அதிராம்பட்டினம் வழியாக விரைவு ரயில் சேவையை மீண்டும் தொடங்க தெற்கு ரெயில்வேக்கு உத்தரவிடக்கோரி, தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த மு.க.செ அகமது அலி ஜாஃபர் கடந்த 2012 ஆம் ஆண்டு, சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து, அகல ரயில் பாதை பணிகள் நடந்து முடிந்து, பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையேயான பாதையில் கடந்த 2018 ஆம் ஆண்டும், அதேபோல், பட்டுக்கோட்டை ~ திருவாரூர் இடையேயான பாதையில் கடந்த 2019 ஆம் ஆண்டும் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டு, கடந்த ஓர் ஆண்டாக இந்த வழித்தடத்தில் டெமு ரயில் இயக்கப்பட்டு வருகின்றன.

காரைக்குடி ~ திருவாரூர் இடையேயான அகல ரெயில்பாதை பணிகள் நிறைவுபெற்றும், இன்னும் விரைவு ரயில் சேவை தொடங்கவில்லை. இதனால், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி ஆகிய பகுதி பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் பலர் தொடர் கோரிக்கை வைத்தும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே, கடந்த 2012 ஆம் ஆண்டு, சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள பொதுநல வழக்கை துரிதப்படுத்துவது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், அதிராம்பட்டினம் வர்த்தக சங்க நிர்வாகிகள் கே.கே ஹாஜா நஜ்முதீன், என்.ஏ முகமது யூசுப், மனிதநல உரிமை கழகத் தலைவர் ஓ.கே.எம் ஷிபஹத்துல்லா, சமூக ஆர்வலர்கள் எம். நிஜாமுதீன், ஏ.சாகுல் ஹமீது, மு.காதர் முகைதீன், குலாப்ஜாமூன் அகமது அன்சாரி, அகமது ஹாஜா, எம்.கே.எம் அபூபக்கர், எம்.ஆர் ஜமால் முகமது, என்.எம் செய்யது முகமது, ஜமால், ஹிசாம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.