.

Pages

Monday, January 20, 2020

பிலால் நகர், M.S.M நகர் வாக்காளர்களுக்கு திமுகவினர் நன்றி தெரிவிப்பு!

அதிராம்பட்டினம், ஜன.20
உள்ளாட்சி தேர்தலில் பட்டுக்கோட்டை ஒன்றியம் 18-வது வாா்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட நா.சுரேஷ்க்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கு திமுகவினர் இன்று  திங்கட்கிழமை மாலை வீடு வீடாகச் சென்று நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

திமுக மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில், திமுக ஏரிப்புறக்கரை ஊராட்சி செயலாளர் நாகூரான், பட்டுக்கோட்டை ஒன்றியம் 18 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நா.சுரேஷ் உள்ளிட்டோர் பிலால் நகர், எம்.எஸ்.எம் நகர் பகுதியில் வீடு வீடாக வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

இதில், அப்துல் ஜப்பார், எம்.எஸ் கமால், அப்துல் கரீம், அபுசாலிகு, திமுக ஏரிபுறக்கரை ஊராட்சி இளைஞர் அணியினர் பசுபதி, சபரி நாதன், மனோஜ், ஐயப்பன், நாகூரான், என்.குணசேகரன், சுப்பிரமணியன், ரமேஷ் கண்ணன், மணிமாறன், ஆசைத்தம்பி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

அப்போது, இப்பகுதியில் தார்சாலை, வடிகால் வசதி, சுகாதாரமான குடிநீர் விநியோகம், குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.