.

Pages

Thursday, January 9, 2020

அதிராம்பட்டினத்தில் இலவச தென்னை மரக்கன்றுகள் வழங்கல் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.09
தனலட்சுமி வங்கி 93-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பசுமையை வலியுறுத்தி இலவச தென்னை மரக்கன்றுகள் வழங்கும் முகாம் அவ்வங்கியின் அதிராம்பட்டினம் கிளை வளாகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட, அதிராம்பட்டினம் மருத்துவர் டாக்டர் எச். அப்துல் ஹக்கீம் முகாமை தொடங்கி வைத்து, வங்கி வாடிக்கையாளர்கள் 93 பேருக்கு தென்னை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கினார். பேராசிரியர் எம்.சீனி கமால் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

வங்கி கிளை மேலாளர் திருமதி ஆர்.பாலா தலைமை வகித்து, வரவேற்றுப் பேசினார். முகாமில், வங்கி அலுவலர்கள் பிரசன்னா வெங்கடேஷ், கே.ரம்யா, பி.சண்முகம் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.