அதிராம்பட்டினம், ஜன. 27
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி விழிப்புணர்வு மற்றும் கண்டனப் பொதுக்கூட்டம் அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் அருகில் திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் முகமது சேக் ராவூத்தர் தலைமை வகித்தார். அவ்வமைப்பின் எம்.நசுருதீன் சாலிகு, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சாதிக் பாட்சா, தமீம் அன்சாரி, அப்துல் ஜப்பார், அப்துல் அஜீஸ், அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் பொறுப்புக்குழு தலைவர் நெய்னா முகமது, உறுப்பினர்கள் செய்யது புஹாரி, முகமது யூசுப், பீர் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய மக்கள் கட்சி மாநிலப் பொதுச்செயலாளர் பி.அப்துல் சமது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைச்செயலாளர் நெல்லை செ.சுந்தரவள்ளி, மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச்செயலாளர் தஞ்சை ஐ.எம் பாதுஷா, ராவியத் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினர்.
கூட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) திரும்பப் பெறக் கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுமாறு அரசை வலியுறுத்துவது, ஜாமியா மில்லியா பல்கலைக் கழகம், அலிகார் பல்கலைக்கழகம், ஜெ.என்.யூ ஆகிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏபிவிபி அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை வன்மையாகக் கண்டிப்பது எனவும், ஈழத்தமிழர்களையும், இஸ்லாமியர்களையும் வஞ்சிக்கும் மத்திய அரசிற்கு துணை போகும் தமிழக அரசை வன்மையாகக் கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது வரவேற்றுப் பேசினார். நிறைவில், நசுருதீன் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில், பெண்கள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்ப பெறக்கோரி முழக்கமிட்டனர்.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி விழிப்புணர்வு மற்றும் கண்டனப் பொதுக்கூட்டம் அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் அருகில் திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் முகமது சேக் ராவூத்தர் தலைமை வகித்தார். அவ்வமைப்பின் எம்.நசுருதீன் சாலிகு, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சாதிக் பாட்சா, தமீம் அன்சாரி, அப்துல் ஜப்பார், அப்துல் அஜீஸ், அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் பொறுப்புக்குழு தலைவர் நெய்னா முகமது, உறுப்பினர்கள் செய்யது புஹாரி, முகமது யூசுப், பீர் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய மக்கள் கட்சி மாநிலப் பொதுச்செயலாளர் பி.அப்துல் சமது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைச்செயலாளர் நெல்லை செ.சுந்தரவள்ளி, மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச்செயலாளர் தஞ்சை ஐ.எம் பாதுஷா, ராவியத் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினர்.
கூட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) திரும்பப் பெறக் கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுமாறு அரசை வலியுறுத்துவது, ஜாமியா மில்லியா பல்கலைக் கழகம், அலிகார் பல்கலைக்கழகம், ஜெ.என்.யூ ஆகிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏபிவிபி அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை வன்மையாகக் கண்டிப்பது எனவும், ஈழத்தமிழர்களையும், இஸ்லாமியர்களையும் வஞ்சிக்கும் மத்திய அரசிற்கு துணை போகும் தமிழக அரசை வன்மையாகக் கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது வரவேற்றுப் பேசினார். நிறைவில், நசுருதீன் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில், பெண்கள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்ப பெறக்கோரி முழக்கமிட்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.