அதிரை நியூஸ்: ஆக.31
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாளை முதல் ஊரடங்கு தளர்வுக் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் முன்னிலை இன்று (31.08.2020) நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடன், தளர்வுகளுடன் 30.09.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கும், வெளி மாவட்டங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருவதற்கும் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருபவர்கள் கண்டிப்பாக இ-பாஸ் பெற வேண்டும். ஆதார் கார்டு விவரங்கள் மற்றும் இதர விவரங்களை அளிக்கும்பட்சத்தில், உடனடியாக இ-பாஸ் கிடைத்துவிடும்.
கோவில்கள், மசூதிகள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் நிலையான இயக்க முறைகளின்படி, பொதுமக்கள் வழிபாடுகளுக்கு அனுமதிக்கப்படும். வழிபாட்டுத் தலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்திட கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும்.
அரசின் உத்தரவின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது மற்றும் தனியார் போக்குவரத்து இயக்கம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் நிலையான இயக்க முறைகளின்படி தொடங்கப்படும். அனைத்து வகையான வணிக வளாகங்களும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் இயங்குவதற்கு அனுமதி கிடையாது. அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. தேநீர் மற்றும் உணவகங்களில் இரவு 9 மணி வரை பார்சல் உணவு விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழிற்சாலைகளும் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள், பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலையான இயக்க முறைகளின்படி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. திறன் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படும். அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து செயல்படுத்திட பொறுப்பு அலுவலர் ஒருவர் நியமிக்கப்படுவார். வங்கிகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படமாட்டாது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்தவொரு தளர்வுகளும் கிடையாது. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், சுற்றுலாத்தலங்கள் ஆகியவை செயல்பட அனுமதி கிடையாது.
மதம் சார்ந்த கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள், பொழுது போக்கு மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடத்திட அனுமதி கிடையாது என கூறிய மாவட்ட ஆட்சியர் கொரோனா தடுப்புபணியில் மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர், காவல்துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அலுவலர்கள் மற்றும் இதரப்பணியாளர்கள் அலுவலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை தொய்வின்றி செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தெரிவித்தார்
தொடர்ந்து செய்தியாளர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 6494 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 5543 நபர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கை 85 சதவீதத்திற்கு மேலே உள்ளது. தற்போது 837 நபர்கள் நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 1,25,327 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் கொரோனா பரிசோதனை அதிகளவில் செய்யப்படும் மாவட்டங்களில் தஞ்சாவூர் மாவட்டம் ஒன்றாகும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 3948 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு, 1,86,846 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 800-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பொது மக்கள் காய்ச்சல் சளி இருமல் அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக சுய வைத்தியம் செய்யக்கூடாது அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்வதன் மூலம் கொரோனா நோய்த்தொற்று எளிதில் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
மேலும், தனியார் மருத்துமனைகளில் அரசு அறிவத்த வழிகாட்டுதலின்படி கொரோனா சிகிச்சை மற்றும் கட்டணம் மேற்கொள்ள வேண்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துமனைகளை கண்காணிக்க இணை இயக்குநர் சுகாதரப்பணிகள் தலைமையில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதியதாக பிளாஸ்மா வங்கி தொடங்கப்படடுள்ளது இப்பிளாஸ்மா வங்கியில் 20க்கும் மேற்ப்பட்டோர்கள் பிளாஸ்மா தானம் வழங்க முன்வந்துள்ளனர்.
இதுவரை இருவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது பிளாஸ்மா கொடையாளர்கள் தானம் வழங்க மாவட்ட நிர்வாகத்தின் ( www.thanjai.nic.in ) இணையதளத்தில் பதிவு செய்து பிளாஸ்மா தானம் வழங்கலாம்
பொதுமக்கள் அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். வீட்டை விட்டு வெளியே சென்றால் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதேபோல் சமூக இடைவெளியை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்திரன், பயிற்சி ஆட்சியர் அமித் மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருததுரை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் திருமதி.ஜானகி ரவீந்திரன், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் திருமதி.வேலுமணி, கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் விஜயன் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாளை முதல் ஊரடங்கு தளர்வுக் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் முன்னிலை இன்று (31.08.2020) நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடன், தளர்வுகளுடன் 30.09.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கும், வெளி மாவட்டங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருவதற்கும் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருபவர்கள் கண்டிப்பாக இ-பாஸ் பெற வேண்டும். ஆதார் கார்டு விவரங்கள் மற்றும் இதர விவரங்களை அளிக்கும்பட்சத்தில், உடனடியாக இ-பாஸ் கிடைத்துவிடும்.
கோவில்கள், மசூதிகள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் நிலையான இயக்க முறைகளின்படி, பொதுமக்கள் வழிபாடுகளுக்கு அனுமதிக்கப்படும். வழிபாட்டுத் தலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்திட கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும்.
அரசின் உத்தரவின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது மற்றும் தனியார் போக்குவரத்து இயக்கம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் நிலையான இயக்க முறைகளின்படி தொடங்கப்படும். அனைத்து வகையான வணிக வளாகங்களும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் இயங்குவதற்கு அனுமதி கிடையாது. அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. தேநீர் மற்றும் உணவகங்களில் இரவு 9 மணி வரை பார்சல் உணவு விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழிற்சாலைகளும் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள், பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலையான இயக்க முறைகளின்படி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. திறன் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படும். அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து செயல்படுத்திட பொறுப்பு அலுவலர் ஒருவர் நியமிக்கப்படுவார். வங்கிகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படமாட்டாது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்தவொரு தளர்வுகளும் கிடையாது. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், சுற்றுலாத்தலங்கள் ஆகியவை செயல்பட அனுமதி கிடையாது.
மதம் சார்ந்த கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள், பொழுது போக்கு மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடத்திட அனுமதி கிடையாது என கூறிய மாவட்ட ஆட்சியர் கொரோனா தடுப்புபணியில் மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர், காவல்துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அலுவலர்கள் மற்றும் இதரப்பணியாளர்கள் அலுவலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை தொய்வின்றி செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தெரிவித்தார்
தொடர்ந்து செய்தியாளர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 6494 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 5543 நபர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கை 85 சதவீதத்திற்கு மேலே உள்ளது. தற்போது 837 நபர்கள் நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 1,25,327 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் கொரோனா பரிசோதனை அதிகளவில் செய்யப்படும் மாவட்டங்களில் தஞ்சாவூர் மாவட்டம் ஒன்றாகும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 3948 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு, 1,86,846 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 800-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பொது மக்கள் காய்ச்சல் சளி இருமல் அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக சுய வைத்தியம் செய்யக்கூடாது அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்வதன் மூலம் கொரோனா நோய்த்தொற்று எளிதில் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
மேலும், தனியார் மருத்துமனைகளில் அரசு அறிவத்த வழிகாட்டுதலின்படி கொரோனா சிகிச்சை மற்றும் கட்டணம் மேற்கொள்ள வேண்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துமனைகளை கண்காணிக்க இணை இயக்குநர் சுகாதரப்பணிகள் தலைமையில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதியதாக பிளாஸ்மா வங்கி தொடங்கப்படடுள்ளது இப்பிளாஸ்மா வங்கியில் 20க்கும் மேற்ப்பட்டோர்கள் பிளாஸ்மா தானம் வழங்க முன்வந்துள்ளனர்.
இதுவரை இருவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது பிளாஸ்மா கொடையாளர்கள் தானம் வழங்க மாவட்ட நிர்வாகத்தின் ( www.thanjai.nic.in ) இணையதளத்தில் பதிவு செய்து பிளாஸ்மா தானம் வழங்கலாம்
பொதுமக்கள் அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். வீட்டை விட்டு வெளியே சென்றால் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதேபோல் சமூக இடைவெளியை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்திரன், பயிற்சி ஆட்சியர் அமித் மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருததுரை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் திருமதி.ஜானகி ரவீந்திரன், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் திருமதி.வேலுமணி, கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் விஜயன் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.