இந்தியா 74-வது சுதந்திர தினவிழா நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மனிதநேய ஜனநாயக கட்சி அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், சுதந்திர தின கொடி ஏற்றும் நிகழ்வு சனிக்கிழமை காலை நடைபெற்றது.
அதிராம்பட்டினம் பழைய அஞ்சலக சாலை, கிழக்கு கடற்கரைச்சாலை ஆகிய இரு இடங்களில் இந்திய தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டன. இதில், அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருப்புக் குழு உறுப்பினர் அதிரை சேக், அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் அப்துல் சமது ஆகியோர் கொடி ஏற்றி வைத்தனர்.
இந்நிகழ்வில், அதிரை பேரூர் பொருளாளர் அஸ்ரப், நகர துணைச் செயலாளர்கள் ஹாஜா மர்ஜுக், அகமது அஸ்கர், அதிரை பேரூர் தொழிற்ச் சங்க செயலாளர் முகமது ஆரிப், நபில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.