அதிரை நியூஸ்: ஆக. 21
தஞ்சாவூர் மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல், மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.
விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து, குறித்த காலத்தே பண்ணைப்பயிர் சாகுபடி செய்திட ஏதுவாகவும், விவசாயிகளின் நிகர இலாபத்தினை உயர்த்திடவும் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டம் தமிழகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் பெருமளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 2020-21-ஆம் நடப்பு நிதியாண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல், மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்தல் முதலான பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் உழவன் செயலியில் பதிவுசெய்து, மத்திய அரசின் இணையத்தளமான www.agrimachinery.nic.in மூலம் Direct Benefit Transfer (DBT) ன் வழிமுறைகளின் படி மானியம் பெற்று வருகின்றனர்.
இதன்படி, அதிகபட்சமாக டிராக்டர்களுக்கு ரூ.5.00 இலட்சம், நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரங்களுக்கு ரூ.5 இலட்சம், வைக்கோல்கட்டும் இயந்திரங்களுக்கு ரூ.9 இலட்சம், பல்வகைப் பயிர் கதிரடிக்கும் இயந்திரங்களுக்கு ரூ.2.5 இலட்சம், சட்டிக்கலப்பை, கொத்துக்கலப்பை போன்றவற்றிற்கு ரூ.50 ஆயிரம், ரோட்டவேட்டர் என்று அழைக்கக்கூடிய சுழற்கலப்பைகளுக்கு ரூ.50 ஆயிரம், விதைவிதைப்புக் கருவிகளுக்கு ரூ.78 ஆயிரம், விசையால் களையெடுக்கும் கருவிகளுக்கு ரூ.63 ஆயிரம், பவர் டில்லருக்கு ரூ.85 ஆயிரம், அறுவடை இயந்திரங்களுக்கு ரூ.11 இலட்சம், தென்னை ஓலை துகளாக்கும் கருவிக்கு ரூ.63 ஆயிரம், வைக்கோல் கூட்டும் கருவிக்கு ரூ.1.50 இலட்சம், புதர் அகற்றும் கருவிகளுக்கு ரூ.40 ஆயிரம், தட்டை வெட்டும் கருவிகளுக்கு ரூ.28 ஆயிரம், நிலக்கடலை தோண்டும் கருவிகளுக்கு ரூ.75 ஆயிரம், கரும்பு சோகை துகளாக்கும் கருவிகளுக்கு ரூ.1.25 இலட்சம் அல்லது அவற்றின் மொத்த விலையில் 50 சதவிகிதம் இவற்றில் எது குறைவோ, அத்தொகை மானியமாக சிறு, குறு, தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு நடப்பு 2020-21 ஆம் ஆண்டில் வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச விலை அல்லது மொத்த விலையில் 40 சதவிகிதம் இவற்றில் எதுகுறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.
வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்களை ஏற்படுத்துதல்:
விவசாயிகள், கிராமப்புற இளைஞர்கள் (தொழில் முனைவோர் சான்றிதழ் பெறப்பட்டிருப்பின்), விவசாய கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், பஞ்சாயத்து குழுக்கள் போன்றோர் வட்டார அளவில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்களை ரூ.25 இலட்சம் மதிப்பில் அமைத்திட ஏதுவாக 40 விழுக்காடு மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
மொத்த மானியத் தொகையில் பொதுப்பிரிவினருக்கு ரூ.5 இலட்சமும், ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு ரூ.3 இலட்சமும், பிடித்தம் செய்து தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் “மானிய இருப்பு நிதிக்கணக்கில் (Subsidy Reserve Fund Account)” இரண்டு வருடங்களுக்கு இருப்பில் வைக்கப்படும். மீதித் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
இரண்டு வருடங்களுக்குப் பின் பயனாளிக்கு வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சரிபார்த்த பிறகு மானிய இருப்புத் தொகை திரும்ப வேளாண் இயந்திரங்கள் வாடகை மைய பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். விவசாயிகளுக்கு எளிய வகையில் உதவிடும் பொருட்டு, மானிய இருப்பு நிதிக்கணக்கில் மானியத்தொகையினை இருப்பாக வைப்பதற்கு மாற்றாக பொதுப்பிரிவு விவசாயிகள் ரூ.5 இலட்சமும், ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பிரிவு விவசாயிகள் ரூ.3 இலட்சமும் வைப்பு நிதியாக (Fixed Deposit) வழங்கிடும் பட்சத்தில், அவ்வைப்பு நிதி செயற்பொறியாளர் பெயரில் பிணைவைப்பு (pledged in the name of Executive Engineer (AE)) செய்யப்பட்டு இரண்டு வருடங்களுக்கு இருப்பில் வைக்கப்படும். இரண்டு வருடங்களுக்குப்பின் பயனாளிக்கு வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் சரிபார்த்த பிறகு, மானிய இருப்புத் தொகை திரும்ப வேளாண் இயந்திரங்கள் வாடகை மைய பயனாளியின் பிணை வைப்பிலிருந்து சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் அவர்களால் விடுவிக்கப்படும்.
கரும்பு சாகுபடிக்கேற்ற வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் நிறுவுதல்:
கரும்பு சாகுபடிக்கேற்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் விவசாயிகள், கிராமப்புற இளைஞர்கள் (தொழில் முனைவோர் சான்றிதழ் பெறப்பட்டிருப்பின்), விவசாய கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், பஞ்சாயத்து குழுக்கள் போன்றோர் மூலம் ஒவ்வொன்றும் ரூ.150 இலட்சம் மதிப்பீட்டில், 40 விழுக்காடு (அதிகபட்சமாக ரூ.60.00 இலட்சம் வரை) மானிய உதவியுடன் நிறுவப்பட்டு, கரும்பு விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்கப்படுகிறது.
வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றிட முதலாவதாக விவசாயிகள், உழவன் செயலியில் (Uzhavan app) பதிவு செய்திட வேண்டும். பின்னர் அவரது விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளமான www.agrimachinery.nic.in –ல் இணைக்கப்படும். விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளையும் ஒப்புதல் வழங்கப்பட்ட முகவரையும் (னுநயடநச) தங்களது சுயவிருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். விவசாயிகள் முகவரின் விற்பனை விலையை பேச்சுவார்த்தை மூலம் பேரம் பேசி குறைத்திடலாம். குறைக்கப்பட்ட விலைக்குரிய மானியம் இணையதளத்திலேயே கணக்கிடப்படும். குறிப்பிட்ட வேளாண் இயந்திரங்கள் / கருவிகளின் இலக்கு முடிவுற்ற பின்னர் விவசாயிகள் அதே இயந்திரம் அல்லது கருவியை தேர்வு செய்தால், அவர் 1,2,3 என எண்ணிடப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்படுவர். ஏற்கனவே 2019-20 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மூதுரிமை விண்ணப்பங்கள் நடப்பு ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
எனவே, இவ்வாண்டிற்கு விண்ணப்பங்கள் புதிதாக பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு நிதியாண்டில் தனக்குத் தேவைப்படும் ஏதாவது இரண்டு வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளை மட்டுமே மானியவிலையில் விவசாயிகள் வாங்கிட இயலும். அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அதே வகையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானியவிலையில் வாங்கிட இயலும்.
உதவி செயற் பொறியாளர் (வே.பொ), உதவிப் பொறியாளர் (வே.பொ) / இளநிலைப் பொறியாளர் (வே.பொ) ஆகியோர் விவசாயிகளின் நிலத்திற்கு நேரில் சென்று விவசாயிகள் வாங்கிய வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை ஆய்வு செய்வர்.
மேலும் விவசாயி மற்றும் விற்பனை செய்த முகவரால் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து விபரங்கள் மற்றும் ஆவணங்கள் வேளாண்மை பொறியியல்துறை அலுவலர்களால் சரிபார்க்கப்படும்.
அதன் பின்னர், விவசாயிக்கு வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்பந்தப்பட்ட விவசாயி மற்றும் ஆய்வு அலுவலர் ஆகியோருடன் கூடிய (Geotagged) புகைப்படத்தினை இணையதளத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் ஆய்வு அலுவலரால் பதிவேற்றம் செய்யப்படும்.
மேலும், சரிபார்ப்பு பட்டியல் (Check Slip) மற்றும் அலுவலரின் குறிப்புரையும் 10 நாட்களுக்குள் வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்களால் பதிவேற்றம் செய்யப்படும்.
மேற்குறிப்பிட்ட ஆய்வுகள் அனைத்தும் முடிந்த பின்னர், இறுதியாக விவசாயியின் வங்கி கணக்கில் உரியமானியமானது ஆய்வு முடிந்த 10 நாட்களுக்குள் வரவு வைக்கப்படும்.
வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தில் தனிப்பட்ட வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் மானியத்தில் பெற்றிட ஏதுவாக 73 எண்கள் டிராக்டர்கள், 17 எண்கள் நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரங்கள், 5 எண்கள் வைக்கோல்கட்டும் இயந்திரங்கள், 10 எண்கள் ரோட்டவேட்டர் என்று அழைக்கக்கூடிய சுழற்கலப்பைகள், 1 எண் விசையால் களையெடுக்கும் கருவிகள், 16 எண்கள் பவர் டில்லர்கள், 7 எண்கள் அறுவடை இயந்திரங்கள், இம்மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விவசாயிகளுக்குரிய வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கு வட்டாரவாரியான இலக்கு வருகின்ற 24.08.2020 தேதியில் www.agrimachinery.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. இதில் முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கிட மானியம் வழங்கப்படுவதால் விவசாயிகள் தாமாகவே முன்வந்து முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எனவே, விவசாயிகள் தங்களுக்கு அருகாமையிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தினை அணுகி மேலும் விவரங்களைப் பெற்று இத்திட்டத்தின் மூலம் பயனடையுமாறு, கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல், மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.
விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து, குறித்த காலத்தே பண்ணைப்பயிர் சாகுபடி செய்திட ஏதுவாகவும், விவசாயிகளின் நிகர இலாபத்தினை உயர்த்திடவும் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டம் தமிழகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் பெருமளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 2020-21-ஆம் நடப்பு நிதியாண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல், மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்தல் முதலான பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் உழவன் செயலியில் பதிவுசெய்து, மத்திய அரசின் இணையத்தளமான www.agrimachinery.nic.in மூலம் Direct Benefit Transfer (DBT) ன் வழிமுறைகளின் படி மானியம் பெற்று வருகின்றனர்.
இதன்படி, அதிகபட்சமாக டிராக்டர்களுக்கு ரூ.5.00 இலட்சம், நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரங்களுக்கு ரூ.5 இலட்சம், வைக்கோல்கட்டும் இயந்திரங்களுக்கு ரூ.9 இலட்சம், பல்வகைப் பயிர் கதிரடிக்கும் இயந்திரங்களுக்கு ரூ.2.5 இலட்சம், சட்டிக்கலப்பை, கொத்துக்கலப்பை போன்றவற்றிற்கு ரூ.50 ஆயிரம், ரோட்டவேட்டர் என்று அழைக்கக்கூடிய சுழற்கலப்பைகளுக்கு ரூ.50 ஆயிரம், விதைவிதைப்புக் கருவிகளுக்கு ரூ.78 ஆயிரம், விசையால் களையெடுக்கும் கருவிகளுக்கு ரூ.63 ஆயிரம், பவர் டில்லருக்கு ரூ.85 ஆயிரம், அறுவடை இயந்திரங்களுக்கு ரூ.11 இலட்சம், தென்னை ஓலை துகளாக்கும் கருவிக்கு ரூ.63 ஆயிரம், வைக்கோல் கூட்டும் கருவிக்கு ரூ.1.50 இலட்சம், புதர் அகற்றும் கருவிகளுக்கு ரூ.40 ஆயிரம், தட்டை வெட்டும் கருவிகளுக்கு ரூ.28 ஆயிரம், நிலக்கடலை தோண்டும் கருவிகளுக்கு ரூ.75 ஆயிரம், கரும்பு சோகை துகளாக்கும் கருவிகளுக்கு ரூ.1.25 இலட்சம் அல்லது அவற்றின் மொத்த விலையில் 50 சதவிகிதம் இவற்றில் எது குறைவோ, அத்தொகை மானியமாக சிறு, குறு, தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு நடப்பு 2020-21 ஆம் ஆண்டில் வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச விலை அல்லது மொத்த விலையில் 40 சதவிகிதம் இவற்றில் எதுகுறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.
வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்களை ஏற்படுத்துதல்:
விவசாயிகள், கிராமப்புற இளைஞர்கள் (தொழில் முனைவோர் சான்றிதழ் பெறப்பட்டிருப்பின்), விவசாய கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், பஞ்சாயத்து குழுக்கள் போன்றோர் வட்டார அளவில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்களை ரூ.25 இலட்சம் மதிப்பில் அமைத்திட ஏதுவாக 40 விழுக்காடு மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
மொத்த மானியத் தொகையில் பொதுப்பிரிவினருக்கு ரூ.5 இலட்சமும், ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு ரூ.3 இலட்சமும், பிடித்தம் செய்து தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் “மானிய இருப்பு நிதிக்கணக்கில் (Subsidy Reserve Fund Account)” இரண்டு வருடங்களுக்கு இருப்பில் வைக்கப்படும். மீதித் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
இரண்டு வருடங்களுக்குப் பின் பயனாளிக்கு வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சரிபார்த்த பிறகு மானிய இருப்புத் தொகை திரும்ப வேளாண் இயந்திரங்கள் வாடகை மைய பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். விவசாயிகளுக்கு எளிய வகையில் உதவிடும் பொருட்டு, மானிய இருப்பு நிதிக்கணக்கில் மானியத்தொகையினை இருப்பாக வைப்பதற்கு மாற்றாக பொதுப்பிரிவு விவசாயிகள் ரூ.5 இலட்சமும், ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பிரிவு விவசாயிகள் ரூ.3 இலட்சமும் வைப்பு நிதியாக (Fixed Deposit) வழங்கிடும் பட்சத்தில், அவ்வைப்பு நிதி செயற்பொறியாளர் பெயரில் பிணைவைப்பு (pledged in the name of Executive Engineer (AE)) செய்யப்பட்டு இரண்டு வருடங்களுக்கு இருப்பில் வைக்கப்படும். இரண்டு வருடங்களுக்குப்பின் பயனாளிக்கு வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் சரிபார்த்த பிறகு, மானிய இருப்புத் தொகை திரும்ப வேளாண் இயந்திரங்கள் வாடகை மைய பயனாளியின் பிணை வைப்பிலிருந்து சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் அவர்களால் விடுவிக்கப்படும்.
கரும்பு சாகுபடிக்கேற்ற வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் நிறுவுதல்:
கரும்பு சாகுபடிக்கேற்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் விவசாயிகள், கிராமப்புற இளைஞர்கள் (தொழில் முனைவோர் சான்றிதழ் பெறப்பட்டிருப்பின்), விவசாய கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், பஞ்சாயத்து குழுக்கள் போன்றோர் மூலம் ஒவ்வொன்றும் ரூ.150 இலட்சம் மதிப்பீட்டில், 40 விழுக்காடு (அதிகபட்சமாக ரூ.60.00 இலட்சம் வரை) மானிய உதவியுடன் நிறுவப்பட்டு, கரும்பு விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்கப்படுகிறது.
வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றிட முதலாவதாக விவசாயிகள், உழவன் செயலியில் (Uzhavan app) பதிவு செய்திட வேண்டும். பின்னர் அவரது விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளமான www.agrimachinery.nic.in –ல் இணைக்கப்படும். விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளையும் ஒப்புதல் வழங்கப்பட்ட முகவரையும் (னுநயடநச) தங்களது சுயவிருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். விவசாயிகள் முகவரின் விற்பனை விலையை பேச்சுவார்த்தை மூலம் பேரம் பேசி குறைத்திடலாம். குறைக்கப்பட்ட விலைக்குரிய மானியம் இணையதளத்திலேயே கணக்கிடப்படும். குறிப்பிட்ட வேளாண் இயந்திரங்கள் / கருவிகளின் இலக்கு முடிவுற்ற பின்னர் விவசாயிகள் அதே இயந்திரம் அல்லது கருவியை தேர்வு செய்தால், அவர் 1,2,3 என எண்ணிடப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்படுவர். ஏற்கனவே 2019-20 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மூதுரிமை விண்ணப்பங்கள் நடப்பு ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
எனவே, இவ்வாண்டிற்கு விண்ணப்பங்கள் புதிதாக பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு நிதியாண்டில் தனக்குத் தேவைப்படும் ஏதாவது இரண்டு வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளை மட்டுமே மானியவிலையில் விவசாயிகள் வாங்கிட இயலும். அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அதே வகையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானியவிலையில் வாங்கிட இயலும்.
உதவி செயற் பொறியாளர் (வே.பொ), உதவிப் பொறியாளர் (வே.பொ) / இளநிலைப் பொறியாளர் (வே.பொ) ஆகியோர் விவசாயிகளின் நிலத்திற்கு நேரில் சென்று விவசாயிகள் வாங்கிய வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை ஆய்வு செய்வர்.
மேலும் விவசாயி மற்றும் விற்பனை செய்த முகவரால் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து விபரங்கள் மற்றும் ஆவணங்கள் வேளாண்மை பொறியியல்துறை அலுவலர்களால் சரிபார்க்கப்படும்.
அதன் பின்னர், விவசாயிக்கு வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்பந்தப்பட்ட விவசாயி மற்றும் ஆய்வு அலுவலர் ஆகியோருடன் கூடிய (Geotagged) புகைப்படத்தினை இணையதளத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் ஆய்வு அலுவலரால் பதிவேற்றம் செய்யப்படும்.
மேலும், சரிபார்ப்பு பட்டியல் (Check Slip) மற்றும் அலுவலரின் குறிப்புரையும் 10 நாட்களுக்குள் வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்களால் பதிவேற்றம் செய்யப்படும்.
மேற்குறிப்பிட்ட ஆய்வுகள் அனைத்தும் முடிந்த பின்னர், இறுதியாக விவசாயியின் வங்கி கணக்கில் உரியமானியமானது ஆய்வு முடிந்த 10 நாட்களுக்குள் வரவு வைக்கப்படும்.
வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தில் தனிப்பட்ட வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் மானியத்தில் பெற்றிட ஏதுவாக 73 எண்கள் டிராக்டர்கள், 17 எண்கள் நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரங்கள், 5 எண்கள் வைக்கோல்கட்டும் இயந்திரங்கள், 10 எண்கள் ரோட்டவேட்டர் என்று அழைக்கக்கூடிய சுழற்கலப்பைகள், 1 எண் விசையால் களையெடுக்கும் கருவிகள், 16 எண்கள் பவர் டில்லர்கள், 7 எண்கள் அறுவடை இயந்திரங்கள், இம்மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விவசாயிகளுக்குரிய வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கு வட்டாரவாரியான இலக்கு வருகின்ற 24.08.2020 தேதியில் www.agrimachinery.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. இதில் முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கிட மானியம் வழங்கப்படுவதால் விவசாயிகள் தாமாகவே முன்வந்து முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எனவே, விவசாயிகள் தங்களுக்கு அருகாமையிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தினை அணுகி மேலும் விவரங்களைப் பெற்று இத்திட்டத்தின் மூலம் பயனடையுமாறு, கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.