தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அரிமா சங்க நிர்வாகிகள் ~ உறுப்பினர்கள் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் 25.08.2020 அன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல் தலைமை வகித்து, வரவேற்றுப் பேசினார். முன்னாள் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் முன்னிலை வகித்தார். செயலாளர் எம்.நிஜாமுதீன் மாதாந்திர அறிக்கை வாசித்தார். பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் சங்க நிதி நிலை அறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில், அதிராம்பட்டினத்தில் ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்குவது, கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டன. மேலும், சங்கப் பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் அவர்களின் மனைவி ஜலீலா அம்மாள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
கூட்டத்தில், சங்கத்தின் புதிய உறுப்பினராக இணைந்த அப்துல் ரெஜாக் அவர்களுக்கு, அரிமா சங்க மாவட்ட ஒரியண்டேஷன் பிரிவுத் தலைவர் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், பதவி பிரமாணம் செய்து வைத்து, கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். மேலும், அரிமா சங்க மாவட்டத் தலைவர்கள் பேராசிரியர் பி கணபதி, எம். கஜாலி முகமது, டி.பி.கே ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டத்தில், கரோனா பாதிப்பில் உயிர் நீத்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுனம் கடைபிடிக்கப்பட்டது. சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் ஏ.முகமது ஆரீப், ஒய்.முகமது அபூபக்கர் ஆகியோருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டன. நிறைவில், சங்க இயக்குநர் என்.ஆறுமுகச்சாமி நன்றி கூறினார்.
கூட்டத்தில், அரிமா சங்க மாவட்டத் தலைவர்கள் எம்.அகமது, எம்.சாகுல் ஹமீது, கஜாலி முகமது, அதிராம்பட்டினம் அரிமா சங்க இயக்குநர்கள் எஸ்.ஏ அப்துல் ஹமீது, ஆர். செல்வராஜ், அரிமா சங்க நிர்வாகிகள் பி.பிச்சமுத்து, என்.யூ ராமமூர்த்தி, எம்.முகமது அபூபக்கர், எம். அப்துல் ரஹ்மான், முல்லை ஆர்.மதி, மாணிக்க. முத்துசாமி, குப்பாஷா எம்.அகமது கபீர், எம்.கே.எம் முகமது அபூபக்கர், பி.உமா சங்கர், ஏ.வி.எம் வரிசை முகமது உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.