.

Pages

Monday, August 24, 2020

மல்லிபட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்!

மல்லிபட்டினம், ஆக. 24
எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாலோசனைக் கூட்டம், அக்கட்சியின் மல்லிபட்டினம் கிளை அலுவலகத்தில் இன்று (24.8.2020) திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என். முகமது புகாரி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் எஸ். சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், புதிய கல்விக் கொள்கை ரத்து செய்தல், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை கைவிடுதல், கிரிமினல் சட்டங்களில் திருத்தம் செய்வதை கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சி முன்னெடுக்கும் பிரச்சாரம் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. மேலும், இந்த 3 கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் தெருமுனை பிரச்சாரம் மேற்கொள்வது, நோட்டீஸ் விநியோகிப்பது, ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவில், சுதந்திர தினத்தில் மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட பணிகள் குறித்தும், கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்தும், சமூக ஊடக அணியை மேம்படுத்துதல் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.