.

Pages

Saturday, August 29, 2020

அதிரை பைத்துல்மால் சார்பில் உயர் கல்விக்கான உதவித்திட்டம் அறிவிப்பு!

அதிரை நியூஸ்: ஆக.29
அதிரை பைத்துல்மால் அமைப்பின் சார்பில் உயர் கல்விக்கான உதவித்திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி உதவித் தொகை-2020:
தொழிற் படிப்பு – மருத்துவம், பொறியியல், தொழிற்நுட்பம் – படிக்கும் ஏழை / எளிய மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் கல்வி உதவித் தொகையை வழங்கி ஊக்குவிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்படிப்பு படிக்க விரும்பும் தகுதியான ஏழை, எளிய மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியல் மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட சான்றிதழ்களுடன் அதிரை பைத்துல்மால் அலுவலகத்திற்கு நேரில் வந்து விசாரிக்கலாம். அதிராம்பட்டினம் நகரில் பிறந்து, வளர்ந்து, படித்த மாணவர்கள் மட்டும் இந்த கல்வி உதவித் தொகையைப் பெறத் தகுதி உடையவர்கள்.

முழுமையான உயர்கல்வி உதவித்திட்டம் – 2020:
அதிராம்பட்டினம் நகரில் பிறந்து, வளர்ந்து +2 தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று, தொழிற்படிப்பு படிக்க விரும்பும் ஏழை, எளிய மாணவர்களுக்கு முழு படிப்புச் செலவை அதிரை பைத்துல்மால் ஏற்றுக் கொள்ளும். உதவிப்பெற விரும்பும் மாணவர்கள் இத்திட்டத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள அதிரை பைத்துல்மால் அலுவலகத்தை அனுகவும்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.