அதிராம்பட்டினம், ஆக.15
இந்தியா 74-வது சுதந்திர தினவிழா நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின கொடி ஏற்றும் நிகழ்வு அதிராம்பட்டினத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்வுக்கு, அதிராம்பட்டினம் பேரூர் காங்கிரஸ் கட்சி தலைவர் காசிம் தமீம் அன்சாரி தலைமை வகித்து அதிராம்பட்டினம் கடைத்தெரு முக்கம் அருகே உள்ள கொடிக்கம்பத்தில் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மேலும், பேருந்து நிலையம், சேர்மன் வாடி, ஜாவியா சாலை ஆகிய இடங்களில் இந்திய தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டன. இதில், அக்கட்சியின் அதிரை பேரூர் துணைத்தலைவர் நாராயண சாமி, செயலாளர் அதிரை பாருக், சமூக ஆர்வலர் இ.வாப்பு மரைக்காயர் ஆகியோர் கொடியை ஏற்றி வைத்தனர்.
நிகழ்வில், காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் நிர்வாகிகள் பி.திலகராஜ் கட்டபொம்மன், ராஜேந்திரன், தெளலத பாட்சா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இந்தியா 74-வது சுதந்திர தினவிழா நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின கொடி ஏற்றும் நிகழ்வு அதிராம்பட்டினத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்வுக்கு, அதிராம்பட்டினம் பேரூர் காங்கிரஸ் கட்சி தலைவர் காசிம் தமீம் அன்சாரி தலைமை வகித்து அதிராம்பட்டினம் கடைத்தெரு முக்கம் அருகே உள்ள கொடிக்கம்பத்தில் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மேலும், பேருந்து நிலையம், சேர்மன் வாடி, ஜாவியா சாலை ஆகிய இடங்களில் இந்திய தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டன. இதில், அக்கட்சியின் அதிரை பேரூர் துணைத்தலைவர் நாராயண சாமி, செயலாளர் அதிரை பாருக், சமூக ஆர்வலர் இ.வாப்பு மரைக்காயர் ஆகியோர் கொடியை ஏற்றி வைத்தனர்.
நிகழ்வில், காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் நிர்வாகிகள் பி.திலகராஜ் கட்டபொம்மன், ராஜேந்திரன், தெளலத பாட்சா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.