.

Pages

Saturday, August 15, 2020

சுதந்திர தினத்தில் TNTJ அமைப்பினர் இரத்த தானம் (படங்கள்)

மதுக்கூர், ஆக. 15
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், இன்று தமிழகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் இரத்த தான முகாம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் இரத்ததான முகாம் மதுக்கூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, அவ்வமைப்பின் மாவட்ட தலைவர் கே ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார். இதில், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவக்குழுவினர் கலந்துகொண்டு 60 யூனிட் இரத்தததை டி.என்.டி.ஜே கொடையாளர்களிடமிருந்து தானமாகப் பெற்றனர்.

இந்நிகழ்வில், மாவட்ட துணைச்செயலாளர் பாவா, மாவட்ட மாணவரணி இத்ரீஸ், மதுக்கூர் கிளைத தலைவர் அபுபக்கர், செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், துணைத் தலைவர் ஆசிப், துணை செயலாளர் ஆசிக்  அன்சர் மிஸ்க் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாட்டினை, கிளை மாணவரணி மற்றும் மருத்துவரணி பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.