.

Pages

Saturday, August 22, 2020

GO கொரோனா!

அதிரை நியூஸ்: ஆக.22
கற்காலம் முதல் தற்காலம் வரை உலகில் ஏதாவது ஒரு பெயரில் தொற்றுநோய் கிருமிகள் வந்து மக்களை தாக்கிவிட்டு போய்க் கொண்டுதான் இருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல என்றே சொல்லலாம். அந்த வரிசையில் தற்போது COVID-19 என்னும் வைரஸ் உலகையே அச்சுறுத்தி ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

இதன் தாக்கத்தால் உலகெங்கும் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டு பலரது தொழில் முடங்கி பலர் வேலை இழந்து உள்நாட்டிலேயே அகதிபோல
அடுத்த மாவட்டத்திற்க்கு கூட செல்லமுடியாமலும்  அயல்நாட்டில் வசிக்கக் கூடியவர்கள் அவசரத்தேவைக்குக் கூட சொந்த ஊர் திரும்ப முடியாமலும் வயோதிகள் நோயாளிகள் கர்ப்பினி பெண்கள் மருத்துவமனை சென்று தக்க நேரத்தில் சிகிச்சை பெற முடியாமலும் அனைத்தையும் லாக் டவுன் ஆக்கி சோகத்தில் தத்தளிக்க வைத்து விட்டது இந்தக் கண்ணுக்குத் தெரியாத கொடூரக் கொரோனா வைரஸ்.

ஒருகாலத்தில் பெரியம்மை காலரா பேதி பன்றிக்காய்ச்சல், பறவைக் காய்ச்சல், டெங்குக் காய்ச்சல், யானைக்கால் நோய் சிக்கன் குனியா இப்படி பலவகை நோய்கள் வந்து மனித இனத்தை ஆட்டிப்படைத்தன. அந்த வகையில் தற்ப்போது கொரோனா பல மனித உயிர்களை பழிவாங்கி நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது.

இந்தக்கிருமி அயல்நாட்டின் வருகையாக காரணம் சொல்லப்பட்டாலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களையும் வயதானவர்களையும் எளிதில் தாக்குகிறது.

இத்தகைய சூழ்நிலையில் நம் உடலின் சக்திக்குறைபாடுகளை கவனித்துக்கொள்வது மிக அவசியமாக இருக்கிறது. ஜலதோஷம் இருமல் காய்ச்சல் உடல் அசதி மூச்சுத்தினரல் சாதாரணமாக எப்போதும் மனிதர்களுக்கு இருந்தாலும் தற்போது இது கொரோனாவின் அறிகுறியாகவே சொல்லப்படுகிறது. உடல் உஷ்னத்தை கணக்கில் கொண்டு கொரோனா பாசிடீவ், நெகடீவ் சான்று கொடுத்தாலும் அது சிலருக்கு கொரோனா அல்லாது வேறு உடல் உபாதையாலும் உடல் உஷ்னத்தை அடைந்திருப்பதால் சரியாக தீர்மானிகக்க முடிவதில்லை.
தீவிர மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே சரியாக அறியப்படுகிறது.

அடுத்து பார்ப்போமேயானால் இதுவரை கொரோனாவை நூறு சதவிகிதம் குணப்படுத்த சரியான மருந்து கண்டு பிடிக்க முடியாமல் உலக மருத்துவ மாமேதைகளே திணறிக் கொண்டிருப்பது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது.

எதுவாயினும் நாம் உண்ணும் உணவிலும், உடுத்தும் உடையிலும் நமது உடலை சுத்தமாக வைத்துக் கொள்வதிலும் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டும். நமது நடவடிக்கையும் பேணுதலும் சரியாக இருப்பின் எந்தக் கொரோனாவும் நம் அருகில் வராது.

இதுபோன்ற காலகட்டத்தில் அரசு சொல்லும் அறிவுரையின்படி சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் வெளியில் சென்று வீடு திரும்பும்போது அவசியம் கை, முகம் கழுவுதல் போன்றவற்றை தவறாது கடைபிடித்து நடப்பதாலும் இதிலிருந்து தப்பித்துக்கொள்ள வழிவகுக்கும்.

எதுவும் இயற்க்கைக்கு மாறாக பசுமையை அழித்து மாசுக்காற்றை பரவவிட்டு நிலத்தடியில் நீரின்றிச் செய்து நமது சுற்றுச்சூழலை மாற்றிவோமேயானால் இத்தகைய கிருமிகளின் ஆதிக்கம் வெவ்வேறு பெயர்களில் தோன்றிகொண்டே இருக்கும்.

இதனை தடுக்க அரசின் முயற்சியும் பொது மக்களின் ஒத்துழைப்பும் இயற்கையை அழிக்காமலும், சுகாதாரத்தை பேணியும் முடிந்தவரை நாம் முயற்சிப்போம். அயராது போராடிக் கொரோனாவை விரட்டுவோம். கொரோனாவை நாம் வெல்வோம்.

அதிரை மெய்சா


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.