அதிராம்பட்டினம், ஆக.20
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளை-1, கிளை-2 சார்பில், 83-வது இரத்த தான முகாம் அதிராம்பட்டினம் ஆய்ஷா மகளிர் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கே ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன், அதிராம்பட்டினம் கிளை 1, கிளை 2 நிர்வாகிகள் எம்.நவாப்ஷா, ஹபிபு ரஹ்மான், கே.நசுருதீன், பஜால் முகைதீன், எம்.ஐ அப்துல் ஜப்பார், சிராஜுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை மருத்துவக்குழுவினர் கலந்துகொண்டு, 62 யூனிட் இரத்தத்தை டி.என்.டி.ஜே அமைப்பின் கொடையாளர்களிடமிருந்து தானமாகப் பெற்றனர். முன்னதாக, சிறப்பு அழைப்பாளர்களாக அதிராம்பட்டினம் மருத்துவர்கள் டாக்டர் எஸ்.ஹாஜா முகைதீன், டாக்டர் எம். சேக் அலி ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில், அவ்வமைப்பினர் பலர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாட்டினை, அதிராம்பட்டினம் கிளைகளின் மருத்துவ அணியினர் செய்திருந்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளை-1, கிளை-2 சார்பில், 83-வது இரத்த தான முகாம் அதிராம்பட்டினம் ஆய்ஷா மகளிர் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கே ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன், அதிராம்பட்டினம் கிளை 1, கிளை 2 நிர்வாகிகள் எம்.நவாப்ஷா, ஹபிபு ரஹ்மான், கே.நசுருதீன், பஜால் முகைதீன், எம்.ஐ அப்துல் ஜப்பார், சிராஜுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை மருத்துவக்குழுவினர் கலந்துகொண்டு, 62 யூனிட் இரத்தத்தை டி.என்.டி.ஜே அமைப்பின் கொடையாளர்களிடமிருந்து தானமாகப் பெற்றனர். முன்னதாக, சிறப்பு அழைப்பாளர்களாக அதிராம்பட்டினம் மருத்துவர்கள் டாக்டர் எஸ்.ஹாஜா முகைதீன், டாக்டர் எம். சேக் அலி ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில், அவ்வமைப்பினர் பலர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாட்டினை, அதிராம்பட்டினம் கிளைகளின் மருத்துவ அணியினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.