.

Pages

Thursday, August 27, 2020

தமிழக முதல்வர் நாளை (ஆக.28) தஞ்சை வருகை: முன்னேற்பாடு பணிகள் ஆய்வு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஆக.27
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை 28.08.2020 அன்று வருகைப் புரிவதை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்குபெறும் நிகழ்ச்சிகளின் முன்னேற்பாட்டுப் பணிகளை வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் ஆகியோர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பயனாளிகள் மற்றும் தொழில் முனைவோர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு தகுந்த ஏற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள்.

நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைவரும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் எனவும், முதல்வர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் சிறப்பாக செய்திட கேட்டுக்கொண்டார்கள்.

இவ்வாய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், மாவட்ட திட்ட அலுவலர் பழனி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும், காவல்துறை அலுவலர்களும் கலந்துக் கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.