.

Pages

Friday, August 21, 2020

“கோ கோ கொரானா” விழிப்புணர்வு பாடல் குறுந்தகடு வெளியீடு!

அதிரை நியூஸ்: ஆக.21
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரானா விழிப்புணர்வு பாடல் குறுந்தகடை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்தராவ் இன்று (21.08.2020) வெளியிட்டார்.
         
தஞ்சாவூர் மாநகராட்சி கொரானா தடுப்பு குறித்த பொது மக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதுவரை 50,000 மேற்பட்ட துண்டு பிரசுரங்கள் மாநகராட்சி முலம் வழங்கப்படடுள்ளது. மாநகராட்சியின் அனைத்து கட்டிடங்கள், வணிக வளாகங்களில் முககவசம் அணிதல் சோப்பு போட்டு கை கழுவுதல் போன்ற வாசகங்கள் அடங்கிய தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக பொது மக்களிடம் கொரானா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தஞ்சாவூர் மாநகராட்சியும், புனித ஆரோக்கிய அன்னை செவிலியர் கல்லூரியும் இணைந்து தயாரித்த “கோ கோ கொரானா” (GO GO Corona) என்ற விழிப்புணர்வு பாடல் ஒளி, ஒலி குறுந்தகடை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்தராவ் வெளியிட தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

இவ் விழிப்புணர்வு பாடல் ஒளி, ஒலி குறுந்தகடை மாநகராட்சியால் நடத்தப்படும் மருத்துவ முகாம் மற்றும் மாநகராட்சி விளம்பர வாகனம் முலம் அனைத்து பகுதிகளிலும் விளம்பரம் செய்யப்படவுள்ளது. என ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) பாலச்சந்திரன மாநகராட்சி நல அலுவலர் நமச்சிவாயம் செயற்ப்பொறியாளர் ராஜக்குமாரன் புனித ஆரோக்கிய அன்னை செவிலியர் கல்லூரி தாளாளர் அருட்த்திரு ஆரோக்கிய பாஸ்கர் உதவி செயற்ப்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.