அதிரை நியூஸ்: ஆக.17
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (17.08.2020) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கும்பகோணம் அன்னை பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் வரவேற்பு பிரிவிலிருந்து தொலைபேசி மூலம் உள்ளே சிகிச்சை பெற்று வருபவர்களை தொடர்பு கொண்டு, அவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்தார். தொடர்ந்து, அன்னை பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்தா சிகிச்சை பிரிவினை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் கும்பகோணம் அன்னை பொறியியல் கல்லூரி கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த 12 நபர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
தொடர்ந்து, கும்பகோணம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது :-
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 4888 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 3808 நபர்கள் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 78 சதவீதமாக உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் மருத்துவர்கள் சிறப்பாக பணியாற்றுவதாலும், நோயாளிகளுக்கு கபசுர குடிநீர், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் மற்றும் சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருவதாலும் குணமடைபவர்களின் சதவீதம் நன்றாக உள்ளது.
மேலும், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் கேரம், செஸ் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களின் தேவைகளை நிறைவேற்றிட சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர்.
கும்பகோணம் அன்னை பொறியியல் கல்லூரி கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 12 நபர்கள் குணமடைந்து இன்று(17.08.2020) வீடு திரும்பியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 1007 நபர்கள் தற்போது கொரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சுமார் 4000 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது 106 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. கும்பகோணம் பகுதியில் இதுவரை கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட 748 நபர்களில் 632 நபர்கள் சிகிச்சை பெற்று முழுமையாக குணம் அடைந்துள்ளனர். மீதமுள்ள நபர்கள் கும்பகோணம் அன்னை பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கும்பகோணம் பகுதியில் 14 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 2619 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மருத்துவ முகாம்களில் கலந்து கொள்பவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மற்றும் பல்ஸ் ஆக்சிமீட்டர் ஆகிய கருவிகள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, கொரோனா நோய்த்தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு ஸ்வாப் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும்ää மருத்துவ முகாம்களில் கலந்து கொள்பவர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை 1,25,299 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்கள் தங்களின் பகுதியில் நடைபெறும் மருத்துவ முகாமில் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1,05,781 நபர்களுக்கு மருத்துவ முகாம்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் அதிகமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட மாவட்டங்களில் தஞ்சாவூர் மாவட்டமும் ஒன்றாகும். கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்களுக்கு அவர்களது வீட்டில் தனியறை மற்றும் தனி கழிப்பறை இருக்கும்பட்சத்தில், அரசு மருத்துவர்களின் பரிந்துரையின்படி அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிமுகப்படுத்தப்பட்ட கொரோனா மருந்து பெட்டகம் தஞ்சாவூர் மாவட்டத்தில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கும்பகோணம் அன்னை பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சித்தா சிகிச்சை பிரிவு தொடங்கப்படவுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வட்ட அளவிலான பறக்கும் படை குழுக்கள் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத 40235 நபர்களிடமிருந்து சுமார் 42,97,650 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இ-பாஸ் வேண்டி ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்பவர்கள் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படுகிறது.
கும்பகோணம் தாராசுரம் மார்க்கெட்டில் அதிக எண்ணிக்கையில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதால் தற்காலிகமாக மூடப்பட்டு மொத்த வியாபாரிகளுக்கு அருகாமையில் ஒரு தற்காலிக மார்க்கெட் அமைத்துக் கொடுக்கப்பட்டது. தாராசுரம் மார்க்கெட்டில் நாளை முதல் சுழற்சி முறையில் கடைகள் இயங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தாராசுரம் மார்க்கெட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்திட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திடுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பின்னர், கும்பகோணம் பாரதி நகரில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமினையும், ஜான் செல்வராஜ் நகரில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களை தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு அவர்களின் உடல் நலம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டறிந்தார். பின்னர், மகாமகம் குளம் அருகில் இந்திரா காந்தி சாலையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியினை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டார்.
அதன் பின்னர், பேட்டை பாசிக்காரதெருவில் வீடு வீடாக சென்று கொரோனா கணக்கெடுக்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, நாளை முதல் செயல்படவுள்ள தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டார்.
இந்நிகழ்வுகளின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் விஜயன், கும்பகோணம் நகராட்சி ஆணையர் திருமதி.லெட்சுமி, கும்பகோணம் வட்டாட்சியர் பாலசுப்ரமணியன், கும்பகோணம் நகர் நல அலுவலர் திருமதி.பிரேமா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (17.08.2020) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கும்பகோணம் அன்னை பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் வரவேற்பு பிரிவிலிருந்து தொலைபேசி மூலம் உள்ளே சிகிச்சை பெற்று வருபவர்களை தொடர்பு கொண்டு, அவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்தார். தொடர்ந்து, அன்னை பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்தா சிகிச்சை பிரிவினை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் கும்பகோணம் அன்னை பொறியியல் கல்லூரி கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த 12 நபர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
தொடர்ந்து, கும்பகோணம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது :-
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 4888 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 3808 நபர்கள் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 78 சதவீதமாக உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் மருத்துவர்கள் சிறப்பாக பணியாற்றுவதாலும், நோயாளிகளுக்கு கபசுர குடிநீர், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் மற்றும் சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருவதாலும் குணமடைபவர்களின் சதவீதம் நன்றாக உள்ளது.
மேலும், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் கேரம், செஸ் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களின் தேவைகளை நிறைவேற்றிட சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர்.
கும்பகோணம் அன்னை பொறியியல் கல்லூரி கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 12 நபர்கள் குணமடைந்து இன்று(17.08.2020) வீடு திரும்பியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 1007 நபர்கள் தற்போது கொரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சுமார் 4000 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது 106 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. கும்பகோணம் பகுதியில் இதுவரை கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட 748 நபர்களில் 632 நபர்கள் சிகிச்சை பெற்று முழுமையாக குணம் அடைந்துள்ளனர். மீதமுள்ள நபர்கள் கும்பகோணம் அன்னை பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கும்பகோணம் பகுதியில் 14 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 2619 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மருத்துவ முகாம்களில் கலந்து கொள்பவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மற்றும் பல்ஸ் ஆக்சிமீட்டர் ஆகிய கருவிகள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, கொரோனா நோய்த்தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு ஸ்வாப் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும்ää மருத்துவ முகாம்களில் கலந்து கொள்பவர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை 1,25,299 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்கள் தங்களின் பகுதியில் நடைபெறும் மருத்துவ முகாமில் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1,05,781 நபர்களுக்கு மருத்துவ முகாம்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் அதிகமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட மாவட்டங்களில் தஞ்சாவூர் மாவட்டமும் ஒன்றாகும். கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்களுக்கு அவர்களது வீட்டில் தனியறை மற்றும் தனி கழிப்பறை இருக்கும்பட்சத்தில், அரசு மருத்துவர்களின் பரிந்துரையின்படி அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிமுகப்படுத்தப்பட்ட கொரோனா மருந்து பெட்டகம் தஞ்சாவூர் மாவட்டத்தில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கும்பகோணம் அன்னை பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சித்தா சிகிச்சை பிரிவு தொடங்கப்படவுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வட்ட அளவிலான பறக்கும் படை குழுக்கள் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத 40235 நபர்களிடமிருந்து சுமார் 42,97,650 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இ-பாஸ் வேண்டி ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்பவர்கள் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படுகிறது.
கும்பகோணம் தாராசுரம் மார்க்கெட்டில் அதிக எண்ணிக்கையில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதால் தற்காலிகமாக மூடப்பட்டு மொத்த வியாபாரிகளுக்கு அருகாமையில் ஒரு தற்காலிக மார்க்கெட் அமைத்துக் கொடுக்கப்பட்டது. தாராசுரம் மார்க்கெட்டில் நாளை முதல் சுழற்சி முறையில் கடைகள் இயங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தாராசுரம் மார்க்கெட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்திட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திடுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பின்னர், கும்பகோணம் பாரதி நகரில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமினையும், ஜான் செல்வராஜ் நகரில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களை தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு அவர்களின் உடல் நலம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டறிந்தார். பின்னர், மகாமகம் குளம் அருகில் இந்திரா காந்தி சாலையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியினை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டார்.
அதன் பின்னர், பேட்டை பாசிக்காரதெருவில் வீடு வீடாக சென்று கொரோனா கணக்கெடுக்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, நாளை முதல் செயல்படவுள்ள தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டார்.
இந்நிகழ்வுகளின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் விஜயன், கும்பகோணம் நகராட்சி ஆணையர் திருமதி.லெட்சுமி, கும்பகோணம் வட்டாட்சியர் பாலசுப்ரமணியன், கும்பகோணம் நகர் நல அலுவலர் திருமதி.பிரேமா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.