.

Pages

Wednesday, August 12, 2020

மீனவர்களையும், மீன்பிடித்தொழிலையும் பாதுகாக்கக் கோரி அதிரையில் ஆர்ப்பாட்டம்!

அதிராம்பட்டினம், ஆக.12
மத்திய அரசின் தேசியக் கடல் மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை வரைவு மசோதா - 2019 வை மறுபரிசீலனை செய்யவேண்டும், தடைசெய்யப்பட்ட இரட்டை மடி சுருக்கு மடி போன்றவற்றை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இயற்கை வளங்களை பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, AITUC மற்றும் நாட்டுப்படகு மீனவர் சங்க மீனவர்கள் புதன்கிழமை அதிராம்பட்டினத்தில் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.

இதில், மீனவ சங்க மாவட்டச் செயலாளர் என்.காளிதாஸ், ஏ.ஐ.ஓய்.எப் ஒன்றியச் செயலாளர் கே.ஹாஜா முகைதீன், எஸ்.பஞ்சவர்ணம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் எச்.அப்துல் முனாப், ஒய். பாருக், ஜி. மருதப்பன், சுலைமான், எஸ். மீரா சாகிப், மலர்கொட, சுப்பிரமணியம், எஸ். தர்மலிங்கம்  உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.