![]() |
கோப்பு படம் |
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக வாளகத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி (28.08.2020) அன்று பிளாஸ்மா வங்கியை தொடங்கி வைத்தார். அப்பிளாஸ்மா வங்கிற்கு பிளாஸ்மா தானம் வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மாவட்ட வளர்ச்சிப்பணி மற்றும் கரோனா நோய்த்தடுப்புப் பணி ஆய்வுக் கூட்டத்திற்கு வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதியதாக பிளாஸ்மா வங்கியை தொடங்கி வைத்துள்ளார்.
கரோனா நோய் தடுப்பு பணிக்காக தமிழக முதல்வர் அவர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிளாஸ்மா சிகிச்சை முறையில் சிகிச்சை மேற்கொள்ள பிளாஸ்மா தேவைப்படுவதால் ஏற்கனவே கரோனா தொற்று ஏற்பட்டு குணமான நபர்கள் 28 நாட்களுக்குப் பிறகு அதிகப்பட்சமாக 90 நாட்களுக்குள் 18 முதல் 55 வயதுக்குள்ள ஆண் பெண் இருபாலர் 55 கிலோ கிராமிற்கு மேல் உள்ள நபர்கள் தாங்களே முன்வந்து பிளாஸ்மா தானம் வழங்கலாம். இயல்பான எப்பொழுதும் மற்ற இரத்ததானம் செய்ய கடைப்பிடிக்கப்படும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
பிளாஸ்மா தானம் கொடையாளர்கள் 28 நாட்கள் இடைவெளிவிட்டு மறுமுறை பிளாஸ்மா தானம் அளிக்கலாம் அதிகப்பட்சமாக இரண்டுமுறை மட்டுமே தானம் அளிக்கலாம்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்காக பிளாஸ்மா கொடையாளர்கள் அதிகமாக பிளாஸ்மா கொடை வழங்கி பல உயிர்களை காக்க முன் வருமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்தராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.