.

Pages

Tuesday, August 18, 2020

அவதூறு பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிய கோரி அதிராம்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம்!

அதிராம்பட்டினம், ஆக.18
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில அலுவலகத்தையும், மூத்தத் தலைவா் இரா. நல்லகண்ணு குறித்தும் சமூக ஊடகங்களில் இழிவுபடுத்தி, அவதூறு பரப்பி வரும் சமூக விரோதக் கும்பலின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அதிராம்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

ஆரப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் என்.காளிதாஸ் தலைமை வகித்தார். இதில், அக்கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஏ.எச் பசீர் அகமது, எம்.சுப்பிரமணியம், எச்.அப்துல் முனாப், எஸ். மீரா சாகிப், எம்.முகமது இக்பால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.