அதிரை நியூஸ்: ஆக.10
தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுதந்திர தின விழா குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் இன்று (10.08.2020) நடைபெற்றது.
ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது :-
வருகின்ற 15.08.2020 சனிக்கிழமை அன்று தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திரதின விழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அரசின் வழிகாட்டுதலின்படி, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் ஆகியவற்றுடன் சுதந்திர தின நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப அளவு பரிசோதனை செய்து கைசுத்திகரிப்பான் வழங்கிய பின்னரே அனுமதிக்க வேண்டும்.
தீயணைப்புத்துறை மூலம் மைதானம் முழுவதும் தண்ணீர் மற்றும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும். விழா நடைபெறும் ஆயுதப்படை மைதானத்தில் கிருமிநாசினி கைகழுவும் அமைப்பு, குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிட வசதி ஆகியவற்றை தஞ்சாவூர் மாநகராட்சி மூலம் மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத்துறையினர் மருத்துவக்குழு மற்றும் 108 ஆம்புலன்ஸை தயார் நிலையில் வைத்திட வேண்டும்.
விழா நடைபெறும் மைதானத்தில் கொடிக்கம்பம், மேடை ஆகியவற்றை சீர் செய்து புதிதாக வர்ணம் பூசும் பணி மற்றும் கொடி மேடை, மைதான நுழைவுவாயில் தடுப்பு அமைக்கும் பணி ஆகியவற்றை பொதுப்பணித்துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.விழா நடைபெறும் மைதானத்தில் ஒலி, ஒளி வசதி மற்றும் மின்தடை ஏற்படாமல் இருக்க ஜெனரேட்டர் வசதியை பொதுப்பணித்துறை மின்கோட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
அனைத்துத் துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து சுதந்திர தின விழா நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திடும் வகையில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுதந்திர தின விழாவினை சிறப்பாக கொண்டாடிட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் திருமதி.ஜானகி ரவீந்திரன், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் திருமதி.வேலுமணி மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுதந்திர தின விழா குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் இன்று (10.08.2020) நடைபெற்றது.
ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது :-
வருகின்ற 15.08.2020 சனிக்கிழமை அன்று தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திரதின விழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அரசின் வழிகாட்டுதலின்படி, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் ஆகியவற்றுடன் சுதந்திர தின நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப அளவு பரிசோதனை செய்து கைசுத்திகரிப்பான் வழங்கிய பின்னரே அனுமதிக்க வேண்டும்.
தீயணைப்புத்துறை மூலம் மைதானம் முழுவதும் தண்ணீர் மற்றும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும். விழா நடைபெறும் ஆயுதப்படை மைதானத்தில் கிருமிநாசினி கைகழுவும் அமைப்பு, குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிட வசதி ஆகியவற்றை தஞ்சாவூர் மாநகராட்சி மூலம் மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத்துறையினர் மருத்துவக்குழு மற்றும் 108 ஆம்புலன்ஸை தயார் நிலையில் வைத்திட வேண்டும்.
விழா நடைபெறும் மைதானத்தில் கொடிக்கம்பம், மேடை ஆகியவற்றை சீர் செய்து புதிதாக வர்ணம் பூசும் பணி மற்றும் கொடி மேடை, மைதான நுழைவுவாயில் தடுப்பு அமைக்கும் பணி ஆகியவற்றை பொதுப்பணித்துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.விழா நடைபெறும் மைதானத்தில் ஒலி, ஒளி வசதி மற்றும் மின்தடை ஏற்படாமல் இருக்க ஜெனரேட்டர் வசதியை பொதுப்பணித்துறை மின்கோட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
அனைத்துத் துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து சுதந்திர தின விழா நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திடும் வகையில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுதந்திர தின விழாவினை சிறப்பாக கொண்டாடிட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் திருமதி.ஜானகி ரவீந்திரன், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் திருமதி.வேலுமணி மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.