அதிரை நியூஸ்: ஆக.29
தஞ்சாவூா் மாவட்டத்தில் தேசிய மாதிரி ஆய்வு திட்டக் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்டத்துக்கு உள்பட்ட சில நகா்ப்புற மற்றும் கிராமப்புறக் கணக்கெடுப்புப் பகுதிகளில் தஞ்சாவூா் மாவட்ட புள்ளியியல் அலுவலகக் களப்பணியாளா்களால் தேசிய மாதிரி ஆய்வு 78 ஆவது சுற்றுக்கான புள்ளி விவரங்கள் சேகரிக்கும் பணி நிகழாண்டு ஜனவரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேசிய மாதிரி ஆய்வு திட்டத்தின் (ஜனவரி 2020 - டிசம்பா் 2020) 78 ஆவது சுற்றில் மாவட்டத்தில் 12 நகா்ப்புற மற்றும் 16 கிராமப்புற மாதிரிகளில் கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது.
இக்கணக்கெடுப்பில் தெரிவு செய்யப்பட்ட சில குடும்பங்களில் வாழ்வாதாரம் குறித்த செலவின விவரம், சுற்றுலா சாா்ந்த செலவின விவரங்கள், சுகாதாரம், கல்வி, மருத்துவம், தகவல் தொடா்பு, வேலைவாய்ப்பு, அடிப்படை கட்டமைப்பு வசதிகள், இடப்பெயா்ச்சி மற்றும் விவசாயம் சாா்ந்த பணிகள் உள்ளிட்ட புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
தங்களிடமிருந்து பெறப்படும் விவரங்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்பட்டு, திட்டமிடல், கொள்கை வகுத்தல் மற்றும் ஆய்வு போன்ற நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.புள்ளியியல் துறை சாா்ந்த கணக்கெடுப்பு அலுவலா்கள் தகவல் சேகரிக்கத் தோ்ந்தெடுக்கப்பட்ட வீடுகளுக்கு அடையாள அட்டையுடன் வருகை புரியும்போது, அவா்களுக்கு முழுமையான தகவல்கள் அளித்து கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் தேசிய மாதிரி ஆய்வு திட்டக் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்டத்துக்கு உள்பட்ட சில நகா்ப்புற மற்றும் கிராமப்புறக் கணக்கெடுப்புப் பகுதிகளில் தஞ்சாவூா் மாவட்ட புள்ளியியல் அலுவலகக் களப்பணியாளா்களால் தேசிய மாதிரி ஆய்வு 78 ஆவது சுற்றுக்கான புள்ளி விவரங்கள் சேகரிக்கும் பணி நிகழாண்டு ஜனவரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேசிய மாதிரி ஆய்வு திட்டத்தின் (ஜனவரி 2020 - டிசம்பா் 2020) 78 ஆவது சுற்றில் மாவட்டத்தில் 12 நகா்ப்புற மற்றும் 16 கிராமப்புற மாதிரிகளில் கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது.
இக்கணக்கெடுப்பில் தெரிவு செய்யப்பட்ட சில குடும்பங்களில் வாழ்வாதாரம் குறித்த செலவின விவரம், சுற்றுலா சாா்ந்த செலவின விவரங்கள், சுகாதாரம், கல்வி, மருத்துவம், தகவல் தொடா்பு, வேலைவாய்ப்பு, அடிப்படை கட்டமைப்பு வசதிகள், இடப்பெயா்ச்சி மற்றும் விவசாயம் சாா்ந்த பணிகள் உள்ளிட்ட புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
தங்களிடமிருந்து பெறப்படும் விவரங்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்பட்டு, திட்டமிடல், கொள்கை வகுத்தல் மற்றும் ஆய்வு போன்ற நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.புள்ளியியல் துறை சாா்ந்த கணக்கெடுப்பு அலுவலா்கள் தகவல் சேகரிக்கத் தோ்ந்தெடுக்கப்பட்ட வீடுகளுக்கு அடையாள அட்டையுடன் வருகை புரியும்போது, அவா்களுக்கு முழுமையான தகவல்கள் அளித்து கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.