அதிரை நியூஸ்: ஆக.18
தஞ்சாவூர் மொத்த கூட்டுறவு பண்டகசாலை வளாகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசம் வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (18.08.2020) தொடங்கி வைத்தார்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசங்களை வழங்கிய பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது :-
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 2,57,300 முகக்கவசங்கள் வரப்பெற்றுள்ளது. அவற்றில் பரிசோதனை செய்யப்பட்ட 77,000 முகக்கவசங்கள் முதற்கட்டமாக பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது. தொடர்ந்து, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா முகக்கவசம் வழங்கப்படவுள்ளது எனவே, பொதுமக்கள் அத்தியாவசிய தேவை மற்றும் பணிக்கு செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து செல்லுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட அழகி குளத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் குளத்தை சுற்றி நடைபாதை அமைத்திடவும், பலன்தரும் மரங்கள் மற்றும் பாரம்பரிய மரங்களை வளர்த்திடவும்ää பெயர்ப்பலகைகள் வைத்து பராமரித்திடவும், சிறுவர் பூங்கா அமைத்திடவும் மாநகராட்சி அலுவலர்களை அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, கரந்தை கருணாசாமி கோயில் குளத்தினை பார்வையிட்டு, மாநகராட்சி சார்பில் நடைபாதை அமைத்திடவும், பாரம்பரியமாக தண்ணீர் ஊற்றி வந்த பாதையினை முழுமையாக நடந்து சென்று பார்வையிட்டு நிரந்தரமாக தண்ணீர் வழங்கிட தேவையான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத் துறையுடன் இணைந்து இணைந்து மேற்கொள்ள மாநகராட்சி அலுவலர்களை அறிவுறுத்தினார்.
மேலும், இரண்டு இடங்களில் ஆற்றின் நடுவில் இரு கரைகளையும் இணைக்கும் வகையில் கல்லணை கால்வாயில் மிதந்து வரும் குப்பைகளை அகற்றி மாநகராட்சி பகுதியில் கல்லணை கால்வாய் ஆரம்பிக்கும் இடமான ரெட்டிபாளையம் மற்றும் முடிவடையும் 20 கண் பாலத்திற்கு அருகிலும் வேலி போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி எடுப்பதற்கான இடத்தினை தேர்வு செய்வது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டது.
இந்நிகழ்வுகளின் போது, மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டரிநாதன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மனோகரன், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் திருமதி.ஜானகி ரவீந்திரன், மாநகராட்சி பொறியாளர் ராஜ்குமார், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
தஞ்சாவூர் மொத்த கூட்டுறவு பண்டகசாலை வளாகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசம் வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (18.08.2020) தொடங்கி வைத்தார்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசங்களை வழங்கிய பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது :-
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 2,57,300 முகக்கவசங்கள் வரப்பெற்றுள்ளது. அவற்றில் பரிசோதனை செய்யப்பட்ட 77,000 முகக்கவசங்கள் முதற்கட்டமாக பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது. தொடர்ந்து, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா முகக்கவசம் வழங்கப்படவுள்ளது எனவே, பொதுமக்கள் அத்தியாவசிய தேவை மற்றும் பணிக்கு செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து செல்லுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட அழகி குளத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் குளத்தை சுற்றி நடைபாதை அமைத்திடவும், பலன்தரும் மரங்கள் மற்றும் பாரம்பரிய மரங்களை வளர்த்திடவும்ää பெயர்ப்பலகைகள் வைத்து பராமரித்திடவும், சிறுவர் பூங்கா அமைத்திடவும் மாநகராட்சி அலுவலர்களை அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, கரந்தை கருணாசாமி கோயில் குளத்தினை பார்வையிட்டு, மாநகராட்சி சார்பில் நடைபாதை அமைத்திடவும், பாரம்பரியமாக தண்ணீர் ஊற்றி வந்த பாதையினை முழுமையாக நடந்து சென்று பார்வையிட்டு நிரந்தரமாக தண்ணீர் வழங்கிட தேவையான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத் துறையுடன் இணைந்து இணைந்து மேற்கொள்ள மாநகராட்சி அலுவலர்களை அறிவுறுத்தினார்.
மேலும், இரண்டு இடங்களில் ஆற்றின் நடுவில் இரு கரைகளையும் இணைக்கும் வகையில் கல்லணை கால்வாயில் மிதந்து வரும் குப்பைகளை அகற்றி மாநகராட்சி பகுதியில் கல்லணை கால்வாய் ஆரம்பிக்கும் இடமான ரெட்டிபாளையம் மற்றும் முடிவடையும் 20 கண் பாலத்திற்கு அருகிலும் வேலி போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி எடுப்பதற்கான இடத்தினை தேர்வு செய்வது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டது.
இந்நிகழ்வுகளின் போது, மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டரிநாதன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மனோகரன், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் திருமதி.ஜானகி ரவீந்திரன், மாநகராட்சி பொறியாளர் ராஜ்குமார், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.