.

Pages

Saturday, August 29, 2020

SDPI கட்சி சார்பில் அதிராம்பட்டினத்தில் இரு வேறு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.29
புதிய தேசியக் கல்விக் கொள்கை ரத்து செய்ய வேண்டும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை கைவிட வேண்டும், கிரிமினல் சட்டங்களில் திருத்தம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சி சார்பில், நாடு தழுவிய பிரச்சார இயக்கம் கடந்த ஆக.25ந் தேதி தொடங்கி வரும் ஆக.31 வரை  நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, எஸ்டிபிஐ கட்சி அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், தெருமுனைப் பிரச்சாரம், அதிராம்பட்டினம் பெரிய கடைத்தெரு முக்கம், பழைய அஞ்சலக சாலை ஆகிய இரு வேறு இடங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எஸ்.அகமது அஸ்லம் தலைமை வகித்தார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எஸ்.முகமது ஜாவித் முன்னிலை வகித்தார்.

இதில், அக்கட்சியின், அதிராம்பட்டினம் பேரூர் இணைச் செயலாளர் சி. அகமது, அதிராம்பட்டினம் பேரூர் செயற்குழு உறுப்பினர் எம். ஜர்ஜீஸ் அகமது ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப்பேசினர்.

முன்னதாக, அதிராம்பட்டினம் பேரூர் கிளைத் (1) தலைவர் எம்.ஐ. ஜமால் முகமது வரவேற்றார். நிறைவில், கிளைப் (1) பொருளாளர் இத்ரிஸ் அகமது நன்றி கூறினார். இதில் அக்கட்சியினர் பலர் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்துகொண்டனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.