.

Pages

Friday, August 16, 2013

குமியும் குப்பைகள் ! குமுறும் பேரூராட்சித்தலைவர் !! [ காணொளி ]

'ஒரு பிளாஸ்டிக் பையை சராசரியாக நாம் பயன்படுத்திக் கொள்ளப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கானஆண்டுகள்' என்பது ஆய்வு அறிக்கைகள்.

பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து சுகாதாரமான, மாசுபாடற்ற சுற்றுச்சுழல் பாதுகாப்பைப் பெற வேண்டும் என்ற உயரிய விழிப்புணர்வு கருத்துகளுடன் நமதூர் பேரூராட்சி நிர்வாகத்தால் ப்ளாஸ்டிக் பை மற்றும் அதன் தொடர்புடைய மக்காத பொருட்களை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யபட்டதோடு மட்டுமல்லாமல் அவற்றை மீறுவோர் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வந்தன.

தடை குறித்த அரசின் ஆணை நகல் எண் : 132 / 2012 Dated 16-08-2012 அன்று தஞ்சை மாவட்ட அரசிதழிலும் வெளியிடப்பட்டன.

அதில்,
முதல் தடவை மீறுவோர் மீது ரூபாய் 250/-ம்
இரண்டாவது தடவை மீறுவோர் மீது ரூபாய் 500/-ம்
மூன்றாவது தடவை மீறுவோர் மீது ரூபாய் 1000/-ம்

மேலும் தொடர்ந்து மூன்று முறைக்கு மேல் மீறினால் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளடைவில் பொதுமக்களின் போதிய ஒத்துழைப்பு மற்றும் மீறுவோர் மீது பேரூராட்சியின் போதிய நடவடிக்கைகள் சற்று குறைந்து காணப்பட்டதால் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடுகள் நகரில் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தன. இதனால் பிளாஸ்டிக் பைகளின் குப்பைகள் ஆங்காங்கே மலைபோல் குமிந்து காணப்பட்டதோடு மட்டுமல்லாமல் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றன.

இதுகுறித்து அதிரை பேரூராட்சித் தலைவர்  S.H. அஸ்லம் அவர்களை 'அதிரை நியூஸ்' சார்பாக நகரின் மத்திய பகுதியில் குமிந்து காணப்படும் குப்பை அருகே சந்தித்து அவர்களின் கருத்தைப்பெற்றோம்.





5 comments:

  1. இந்த குப்பை கூலங்களை ஊரின் முக்கிய பகுதிகளில் பார்க்கும் போது மனதிற்க்கு மிக வேதனை அளிக்கிறது. நமதூர் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படும் அளவுக்கு இருக்கிறது. அசுத்தங்களினால் பல சுகாதாரக்கேடுகள் ஏற்ப்பட்டு பல தொற்று நோய்க்கு ஆளாக நேரிடும் என்பதினை ஒவ்வொரு அதிரை வாசியும் உணர வேண்டும். பொது இடங்களில் இத்தகைய குப்பைகள் கொட்டாமல் நாமும் ஒத்துழைப்பு கொடுப்போமாக.!

    அதிரை நகர பேரூராட்சியும் அதிக அளவில் துப்பரவு பணியாளர்களை பணியமர்த்தி தினமும் அதிகாலை முதலே துப்பரவு பணியை மேற்கொள்ள முயற்ச்சிக்க வேண்டும்.

    ReplyDelete
  2. சுத்தமும் சுகாதாரமும் தான் மக்களின் நிலையான சொத்து.மக்களின் அலட்சியமும் அறியாமையும் மிக பெரிய கேடு விளைவிக்கும் நோய்களுக்கு வழிவகுக்கும்.அன்பு சகோதரர் போருராட்சி மன்ற தலைவர் S.H.அஸ்லம் அவர்களின் பணியும் பொறுப்புணர்வும் பாராட்டத்தக்கது.மக்களின் ஒத்துழைப்புயின்றி எத்திட்டமும் வெற்றியடையாது.நாளைய தலைமுறையினரான நம்பிள்ளைகள் ஆரோக்கியமாகவும் அறிவார்ந்த சமுதாயமாகவும் வளர்ந்திட சுத்தமும் சுகாதாரமும் உள்ள ஊராக நமதூர் ஆகவேண்டும்.பேரூராட்சி தலைவரின் முயற்சிக்கு தோள் கொடுக்க வேண்டும்
    ------------------
    இம்ரான்.M.யூஸுப்
    மக்கள் தொடர்பு செயலாளர்
    அமீரக சமூகநீதி அறக்கட்டளை

    ReplyDelete
  3. பேரூராட்சித் தலைவர் அவர்களே, தாங்கள் சொன்னது எல்லாம் சரி! தாங்கள் கட்சிகாரர் தி.மு.க வை சேர்ந்த கறிக்கடை அஸ்ரப் அவர்கள் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகில் ஆடு வெட்டி அதன் கழிவுகளை இந்தப் பள்ளிக் கூடம் அருகில் கொட்டி வருகிறார்..இதை பற்றி தாங்களிடம் பல புகார்கள் அளித்தும் இவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்???
    சின்ன சிங்கபூர் ஆக்குவேன்.,என்று சொல்லிய தாங்கள் இந்தப் பள்ளிக் கூடம் அருகில் தான் தாங்களின் இல்லமும் உள்ளன.பல முறை இந்த வழியாக செல்லலும் தாங்கள் த.மு.க வை சேர்ந்த அஸ்ரப் மீது நடவடிக்கை எடுக்காமல் கண்டும்,காணாமலும் போவது ஏன்?
    கறிக்கடை நடத்தும் அஸ்ரப் அவர்கள் அவர்களுக்கென்று சொந்த இடம் கறிக்கடை அருகியே உள்ளன.அங்கு ஆடு அறுத்து கழிவுகளை கொட்டலாம் அல்லவா?? பொது மக்கள் பயிலும் பள்ளிகூடத்தில் ஆட்டின் கழிவுகளை கொட்டி வருவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தயவு கூர்ந்து பேரூராட்சித் தலைவர் அவர்கள் தாங்கள் கட்ச்கிகாரர் மீது நடவடிக்கை எடுத்து சின்ன சிங்கபூர் ஆக்குவதற்கு முயற்சிக்க வேண்டும்,....

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. அதிரை சுத்தமும் சுகாதாரமுமாக திகல அதிரை பேருராட்சி எப்படிப்பட்ட நடவடிக்கை எடுத்தாலும் கூட பொதுமக்கள் ஆகிய நாம் முறையாக சுத்தமும் சுகாதாரமுமாக இருந்தால் மட்டும் இதற்கு முடிவாகும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.