.

Pages

Friday, August 23, 2013

பள்ளிக்கு லுங்கி அணிந்து வர தடை !

தங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு அழைத்து செல்லும் போது பெற்றோர்கள் லுங்கி, நைட்டி அணிந்து வர தடை விதிப்பது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 55,900 பள்ளிகளில் 1 கோடியே 36 லட்சம் மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். 6 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை சில பெற்றோர்கள் வாகனங்களில் அனுப்பி வைக்கின்றனர். சில பெற்றோர்கள் தாங்களாகவே அழைத்து சென்று விடுகின்றனர். அப்போது சில நேரங்களில் அவசரத்தில் பெற்றோர்கள் லுங்கி, நைட்டிகள் அணிந்து கொண்டு பள்ளிக்கு வருகிறார்கள்.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருப்பதால், இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அறிக்கை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஒழுக்கத்தை வளர்க்கும் பள்ளிக் கூடத்தில்  பெற்றோர் லுங்கி, அரை டவுசர் ஆகியவை அணிந்து பள்ளிக்கூடங்களுக்கு செல்லக் கூடாது. அவ்வாறு செல்வதாக புகார்கள் வந்துள்ளது. எனவே, பெற்றோர்கள் மனம் புண்படாத வகையில் மாணவர்களின் தாயாக இருந்தால் நைட்டி அணிந்து கொண்டு பள்ளிக்கு செல்லக் கூடாது. தந்தையாக இருந்தால் லுங்கி அணிந்து செல்லக் கூடாது. இதை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு அறிக்கை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது" என்றார்.

நன்றி : விகடன்

6 comments:

  1. இது நம்மூருக்கு சாத்தியப்பட்டு வருமா?

    பள்ளிக்கு செல்வதற்காக மட்டும் நம்மூர் பெற்றோர்கள் பேண்ட் போட்டு செல்வார்களா?

    ReplyDelete
  2. // இது நம்மூருக்கு சாத்தியப்பட்டு வருமா? //

    ஏம்பா மாலிக் நம்மூர்லே பேண்ட் போட்டுக்கிட்டு போனாலே பின்னாடி 'ப்பூ' ன்னு ஊதுவாணுங்க :)

    நம்மூறுக்கு இது சாத்தியப்படாதப்பா

    ReplyDelete
  3. அரசாங்கத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு சும்மா வெட்டியா எதையாவது செய்துகொண்டிருப்பானுக
    உறுப்படியா செய்ய எத்த்னயோ வேளைகள் இருக்கும் அதைவிட்டு வேட்டி, நைட்டி உடுத்திவர தடையாம் தமிழக கலாச்சாரமே வேட்டிதான் ஏன் ரொம்ப போகனும் அரசியல் வாதிகளை முதலில் வேட்டி(ரெட்டுமுல) உடுத்தி சட்டசபைக்கும் முக்கியமான இடங்களுக்கும் வரவேண்டாம் என்று சட்டம்போடு பள்ளிக்கூடத்தை அப்புரம் பார்த்துக்கொள்ளலாம்.

    தெரியாமல்தான் கேட்கின்றேன் வேட்டியும் லுங்கியும் கேவளச்சின்னமா? உலகம் முழுதும் வேட்டியோடு சுத்திக்கிட்டு இருக்கின்றோம். எந்த நாட்டிலும் இதை பற்றி கண்டுகொள்ளவே இல்லை இவர்களுக்கு என்ன கிருக்கு எதுவும் பிடித்துவிட்டதா?

    ஒழுக்கத்தை வளற்கும் பள்ளிகளிலே எத்த்னையோ
    வாத்திங்க மாணவ மாணவிகளிடம் தகாதமுறையில் நடந்து கொள்கின்றனர் அப்படிபட்டவர்களை உடனையாக டிஸ்மிஸ் என்று கடுமையான சட்டம் கொண்டுவா, ஒழுக்கத்தை வளற்கும் பள்ளிகளிலே வாத்திங்க புகைபிடிக்க கூடாதுன்னு, சட்டம் கொண்டுவா, டிரைவர்ஸ் தண்ணி அடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாதுன்னு சட்டம் கொண்டுவா,
    இதையெல்லாம் விட்டுட்டு லுங்கியும் நைட்டியும் உன்னை என்ன செய்தது.
    ஏன் இந்த கொல வெறி

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... ஹா...

      கமெண்ட்ஸ் படிச்சதும் சிரிப்பு வந்துடுச்சி

      Delete
  4. மன்சூராக்கா சூப்பர் கண்டனம்,
    தாவணி போடாமல் இறுக்கமான நைட்டி, அரை டவுசர், லெGக்கீஸ் போன்ற தோலுரித்த தோற்ற உடைகளுக்கு வேனுமானால் அவசியம் தடை விதிக்கலாம். ஆனால் நம் மாநிலத்தின் பாரம்பரிய உடையாகிய மானமுள்ள, தொழுகைக்கு ஏற்றமுள்ள ஆடையாகிய கைலி, லுங்கி இதுகளை தடை செய்வதில் எந்த வகையிலும் நியாயமில்லை. இதில் உள் நோக்கம் உள்ளது. நாளை வெறொரு மானமுள்ள உடைக்கும் தடை செய்யும் நோக்கம் இருக்கும். இது கண்டனத்திற்குரியது.

    ReplyDelete
  5. மன்சூர்காக்காவின் கேள்வி ரொம்ப நியாயமானது.

    ஆமா தெரியாமத்தான் கேட்கிறேன் நைட்டி போட்டுக்கிட்டு எந்தப் பெற்றோர்கள் ஸ்கூலுக்கு போனார்கள்.!.? அப்போ புடவை தான் இவங்க கண்ணுக்கு நைட்டியா தெரியிது போல.!

    நல்லா யோசிச்சி இந்த சட்டத்த கொண்டு வாங்க நாளக்கி இந்த சட்டம் உங்களையும் பாதிக்கும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.