இந்நிலையில் அதிரையில் பெய்த தொடர் மழையால் இந்த சாலை குண்டும் குழியுமாக காட்சியளித்தது. ஆங்காங்கே தண்ணீரும் தேங்கி காணப்பட்டது. இது குறித்து பல்வேறு தரப்பினர் நெடுஞ்சாலை துறையினரிடம் தொடர் கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். இதில் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு. என்ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அவர்களும் சம்பந்தப்பட்டோரிடம் அவ்வப்போது முறையிட்டு வந்தார்.
இந்த நிலையில் அரசு சார்பில் பழுதடைந்த சாலையை மேம்படுத்தும் பணி விரைவில் துவங்க இருப்பதாகவும், இந்த பணிக்காக கடந்த [ 13-11-2014 ] அன்று டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்தது.
இது குறித்து பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. என்ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ நம்மிடம் கூறும் போது...
'அதிரை பேருந்து நிலையத்திலிருந்து சேர்மன்வாடி வழியாக பட்டுக்கோட்டை செல்லும் சாலையை 800 மீட்டர் தூரத்தில், 7 மீட்டர் அகலத்தில் மேம்படுத்தும் விதத்தில் சுமார் ₹ 1.50 கோடி மதிப்பீட்டில் கடந்த [ 13-11-2014 ] அன்று டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்குரிய பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது' என்றார்.
பேப்பர் ரோஸ்ட் சாலைகள் போடாமல் பிளாஸ்டிக் சாலைகள் போட்டால் நல்லது. தமிழ் நாட்டில் சாலைகள் மட்டும் பத்து மாதங்கள் கூட தாக்குபிடிப்பதில்லை. பள்ளங்கள் தோண்டாத இடங்களிலும் சாலைகள் குண்டும் குழியுமாக கிடக்கின்றன. வருடம் முழுதும் இப்படித்தான். அமைச்சர் நடவடிக்கை எடுத்ததுக்கு நன்றி!!!
ReplyDelete