பிளஸ்-1 மாணவர்கள் 35 சதவீத மதிப்பெண் எடுத்தால் தான் தேர்ச்சி என்று தமிழக பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. பிளஸ்-1 வகுப்பில் நன்றாக படித்து தேர்ச்சி பெற்றால்தான் பிளஸ்-2வுக்கு செல்ல முடியும். பிளஸ்-1 வகுப்பில் தேர்ச்சி பெற ஒவ்வொரு பள்ளியிலும் மாறுபட்ட மதிப்பெண் உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை கொண்ட தேர்வுக்குழு பரிந்துரைத்த மதிப்பெண்ணை கொண்டுதான் தேர்ச்சியா? தோல்வியா? என்பதை அந்த பள்ளி முடிவு செய்கிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் 100க்கு 100 இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பிளஸ்-1 தேர்ச்சி சதவீதத்தை அதிக அளவில் வைக்கிறார்கள்.
இந்நிலையில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் இது பற்றி கூறும்போது,
தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என எந்த பள்ளிகளாக இருந்தாலும் ஒவ்வொரு பாடத்திலும் 35 மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி. இந்த மதிப்பெண் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு அமலில் உள்ளது. 35 சதவீதத்திற்கு கீழ் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்த பள்ளிகள் மற்றும் தேர்ச்சி மதிப்பெண் சதவீதம் 35க்கும் அதிகமாக நிர்ணயித்த பள்ளிகள் பற்றி தகவல் தெரிய வந்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அனைத்து வகை பள்ளிகளுக்கும், ஒரே வகை மதிப்பெண்ணை, தேர்ச்சிக்கு நிர்ணயம் செய்திருப்பது வரவேற்க்கதக்கவை.
ReplyDeleteபிளஸ் 1 வகுப்பில், பொதுவாக மாணவர்களை, அதிகளவில் தோல்வி அடைய செய்வதில்லை. வருகைப் பதிவேடு மற்றும் பாடங்களில், ஓரளவிற்கு மதிப்பெண் பெற்றிருந்தால், பாஸ் போட்டு விட்டனர், இந்த நிலை, அரசு பள்ளிகளிலும், மெட்ரிக் பள்ளிகளிலும் மட்டுமே காணப் பட்டது, அரசு உதவிபெறும் பள்ளிகளில், பாடத்திற்கு 40; 50; 60 மதிப்பெண் என நிர்ணயித்து, மாணவர்களை, அதிகளவில் தோல்வி அடையச் செய்தனர்.
கல்வி துறை இப்பதான் ஒரு நல்ல முடிவு எடுத்து இருக்குன்னு சொல்லலாம். நல்லா படிங்கப்பா.