ADT அமைப்பு வெளியிட்டுள்ள துண்டு பிரசுரத்தில் கூறியிருப்பதாவது...
(இன்று 14.11.2014 அதிரை ஜும்ஆப் பள்ளிகளில் வெளியிடப்பட்ட பிரசுரம்)
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!
அல்லாஹ்வின் அடியார்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
23.12.2012 பகல் 2.45 மணி!
அதிரையின் கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள தர்ஹா கபுருக்கு சந்தனம் பூசுவதற்காக மூலஸ்தானத்துக்கு உள்ளே சென்ற பட்டத்து அலாவுத்தீன் இறப்பெய்து இரண்டாண்டுகள் ஓடிவிட்டன; இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் இறப்பில் நாம் பெறவேண்டிய படிப்பினைகள் அநேகம் உள்ளன.
ஆகக் கூடுதலாக 45 நிமிடத்தில் வழக்கமாக வெளியே வரவேண்டிய சர்க்கரை நோயாளியான அவர், ஏறத்தாழ மூன்றுமணி நேரம் (மாலை ஐந்தரை) வரை என்னவானார்? என்று கபுருக் கதவைத் திறந்து பார்க்காமல் வாயிலில் காத்துக் கிடந்தனர் பலர். ஓருயிர் பலியான பின்னும் இந்த அறிவீனத்தை விட்டொழிக்க இன்னுமா தயக்கம்?
அல்லாஹ் மனிதனுக்குப் பகுத்தறிவை வழங்கி, படைப்பினங்கள் அனைத்திலும் உயர்ந்த படைப்பாக ஆக்கியருளியிருக்க, அவனளித்த அருட்கொடையான அறிவை, என்றோ இறந்துபட்ட அவ்லியாவிடம் அடகு வைத்துவிட்டு, "அல்லாஹ்வுடைய மௌத்து" என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதை விட்டொழிக்க இன்னுமா தயக்கம்?
என்றோ மரணித்து, பதினொரு இடங்களில் அடங்கப்பட்டதாகக் கூறப்படும் ஹாஜா அலாவுத்தீன் ஜிஷ்தீ எனும் பெரியாரின் உடல் அதிரையின் கடற்கரைத் தெருவில்தான் உண்மையில் அடக்கப்பட்டது என்றே வைத்துக் கொண்டாலும், அந்தக் கபுருக்குமேல் கட்டடம் கட்டப்பட்டிருப்பதும் அந்தக் கபுருக்கு சந்தனம் பூசுவதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் வன்மையாகத் தடுக்கப்பட்டவை என்பதை ஏற்றுக்கொள்வதற்கு இன்னுமா தயக்கம்?
"சமாதிகளுக்காகக் கட்டடம் எழுப்புவதையும் சமாதிகளின் மீது பூசுவதையும் எழுதி வைப்பதையும் சமாதிகளின் மீது அமர்வதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை செய்தார்கள்" ஜாபிர் (ரலி) : திர்மிதீ 972, அஹ்மது 14748.
அவ்லியாக்களின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, ஆண்டு தோறும் கந்தூரி என்ற பெயரால் விழாக்கள் எடுப்பதும் அதில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதும் எவ்வளவு பெரிய வழிகேடு என்பதைப் பல நபிமொழிகள் எச்சரிக்கின்றன. அல்லாஹ்வின் கோபமும் அல்லாஹ்வின் தூதரின் சாபமும் கந்தூரிக்கு நிச்சயமாக உண்டு என்பதை விளங்குவதற்கு இன்னுமா தயக்கம்?
"உங்கள் வீடுகளை(த் தொழுகையற்ற) கபுருஸ்தான்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; எனது சமாதியை (கந்தூரி) விழா நடக்கும் இடமாக்கி விடாதீர்கள்... என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எச்சரித்தார்கள்" அபூஹுரைரா (ரலி) : அஹ்மது 8449, அபூதாவூது 1746.
"... இறைவா, எனது சமாதியை வழிபடுமிடமாக ஆக்கி விடாதே... என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள்" அதா இப்னு யஸார் (ரலி) : அஹ்மது 7054, முஅத்தா மாலிக் 376 . `
"சமாதிகளைச் சந்திக்கச் செல்லும் பெண்களையும் சமாதிகளில் வழிபாடு செய்யும் பெண்களையும் சமாதிகளில் விளக்கேற்றும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் சபித்தார்கள்" இபுனு அப்பாஸ் (ரலி) : நஸயீ 2016, அபூதாவூது 2817, அஹ்மது 2952, இபுனுமாஜா 1564.
"நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஏற்படுத்திக் கொண்ட யூதர்களையும் கிருத்துவர்களையும் அல்லாஹ் சபித்து விட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் உறுதிபடக் கூறினார்கள். தம்முடைய சமாதியை அவ்வாறு ஆக்கிவிடுவதைப் பற்றி எச்சரித்தார்கள்" அன்னை ஆயிஷா (ரலி) : புகாரீ 3195, 4087, 4089, 5368, முஸ்லிம் 826, அஹ்மது 23976, நஸயீ 696, 2020, முஅத்தா மாலிக் 1387.
கந்தூரியும் கப்ரு வழிபாடும் அல்லாஹ்வால் மன்னிக்க முடியாத பெரும் பாவம் என்பதை மக்களுக்குத் தெளிவாக, உறுதியாக எடுத்துச் சொல்லித் தடுக்க வேண்டியது நம் அனைவரின் மீதும் கடமையாகும். குறிப்பாக, மார்க்கம் அறிந்த ஆலிம்கள் என்போர் மீது கட்டாயக் கடமையாகும். ஏனெனில், மறுமையில் அவர்களுக்குக் கூடுதல் கேள்வியுண்டு. "கந்தூரி என்பது இஸ்லாமிய வழிபாடுகளுள் ஒன்று" என்று பிற மதத்தவர் குறிப்பாக அரசு அதிகாரிகள் தவறாக விளங்கி வைத்திருக்கின்றனர். அதனால்தான் இதில் தலையிடத் தயங்குகின்றனர். "கந்தூரி என்பது இஸ்லாமிய வழிபாடுகளுக்கு எதிரானது; தடை செய்யப்பட வேண்டிய ஒன்று" என்று அரசு அதிகாரிகளுக்குப் புரியும்படி வெளிப்படையாக, தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டியது மார்க்க அறிஞர்களின் பொறுப்பாகும். ஆலிம்களுக்கு இன்னுமா தயக்கம்?
கந்தூரி ஆதரவாளர்கள், 'பெரியாரின் பெயரால் கந்தூரி' எனும் மடமையிலிருந்து இனியாவது விடுதலை பெறவேண்டும்; அதற்கு வல்ல அல்லாஹ்வின் அருள் துணை நிற்க வேண்டும்.
தகவல் : ஏ.முஹம்மது அமீன்
கந்துரி விழாவினை புறக்கணிக்கும் அதிரை ADT அமைப்புக்கு மிகுந்த நன்றி நன்றி நன்றி.....
ReplyDeleteஅறியாத காலங்களில் இதுபோன்ற தவறுகளை நமதூரின் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் அது ஒரு திருவிழா போல கொண்டாடியது என்னமோ உண்மைதான் ...அவற்றை அல்லாஹ் மன்னித்து அருள அனைவரும் துஆ செய்யுவோம் ...ஆனால் நாம் தற்போது தெளிவுபெற்ற மக்கள் இனிமேலும் இதுபோன்ற அனாச்சாரங்களுக்கு துணை போனால் அல்லாஹ் அதை நிச்சயம் மன்னிக்க மாட்டான்.அஸ்தாஹ்பிருல்லாஹிலலீம்.... பதிவின் தெளிவுரைகள் மிக மிக அருமை ....சிந்துத்து செயல்படுவோம் .. இது விசயத்தில் நாங்கள் கேட்டுபோகின்றோம் பந்தயம் என்ன ?? கேட்போர் கெட்டுபோய் அல்லாஹ்விற்கு பதில் சொல்லுங்கள் ..ஆனால் பந்தயம் கட்டம் நாங்கள் தயாராக இல்லை .
ReplyDeleteஹஜ்ஜுக்கு சென்றவர்கள் அங்கே நெரிசலில் இறந்துப்போன சம்பவமும், வாகன மோதலில் இறந்து போன சம்பவமும் அறிந்த யாரும் ஹஜ்ஜுக்குப் போனது தவறு என்று சொல்லவில்லை. அல்லாஹ்வின் நாட்டம் அதன்படியே எல்லாம் நடக்கின்றது. அவ்வாறு ஈமான் கொள்வதே இஸ்லாமியனின் நிலை.
ReplyDeleteதர்ஹாவில் அவர்கள் சந்தனம் வாசனைக்காக பூசுகின்றனர். புனிதம் அடைந்தவர்களுக்கு செய்யும் எல்லாச் செயலும் கண்ணிய உணர்வோடு சுன்னத் ஜமாத்தினர்கள் செய்கின்றனர். ஒருவர் சந்தானம் பூச சென்றதால் இறந்துவிட்டார் என்று அவர்களின் நம்பிக்கையில் குதர்க்கம் காண்பவர் சுன்னத் ஜமாத்தினர் அல்லவே. இவர்கள் பக்கா வஹ்ஹாபிகள். இவர்களே குதர்க்கமாக பேசுகின்றனர்.
வஹ்ஹபிகளுக்கு அடிக்கடி சீண்டுவதுதான் முக்கிய வேலையாக இருக்குமோ. அவர்கள் மார்க்கம் அவர்களது. உங்கள் மார்க்கம் உங்களது. நீங்கள் தர்காகளுக்கு போக்காமல் இருப்பதை விட்டுவிட்டு அவர்களை அடிக்கடி சீண்டுவது ஊரின் அமைதியைக் குழைக்கும். நீங்கள் வேறு. அவர்கள் வேறு. உங்கள் மார்க்கமும் அவர்கள் மார்க்கமும் நேர் எதிரானது என்பது ஏன் ? உங்களுக்குப் புரியவில்லை. உங்களுக்கு சாதகமான ஹதீஸ்களை நீங்கள் எழுதுகிறீர்கள். அவ்வளவே. மக்களை நிம்மதியாக வாழவிடுங்கள். உங்களைப்போல் நீ கொள்கை தவறியவன் ! நான் கொள்கையில் சரியானவன் என்று உங்களுக்குள்ளே கல்யாண மண்டபத்தில் வாக்குவாதம். உங்களுக்குள்ளே தெளிவில்லை ? நீங்கள் அவர்களை குறைக்கூற எந்த விதத்திலும் நியாயம் இல்லை.
கந்தூரிக்கு மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை துண்டு பிரசுரம் கொடுத்து சமூக அக்கறைக் கொண்டவர்கள் போல் காட்டிக் கொள்கிறார்கள், விழாவில் இடம்பெறும் நிகழ்சிகள், ஊர்வலத்தில் கலந்துக்கொள்ளும் மக்கள், அலங்கார வண்டிகள் எல்லாம் எப்போ குறைந்து விட்டது இவர்கள் முயற்சியால் அல்ல காலம் மாறும் போது மக்களும் எண்ணங்களை மாற்றிக் கொள்கிறார்கள்.
ReplyDeleteமக்கள் பொது பிரசினைஇல் என்றைக்கும் இவர்கள் துணை நின்றதுமில்லை, ஒரு விளபரத்திர்க்காக நோட்டீஸ் கொடுக்கப் பட்டுள்ளது. கந்துரி எங்க தெரு பக்கம் வரக்கூடாதுன்னு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து தன் பிரிவினைவாதத்தை காட்டுவார்கள். சிந்தியுங்கள்!