.

Pages

Tuesday, November 11, 2014

ஜி.கே வாசனுக்கு ஆதரவு தெரிவித்து பட்டுக்கோட்டை வாசுகி திருமண மண்டபத்தில் திரண்ட ஆதரவாளர்கள் !

ஜி.கே வாசன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சியை துவக்கியுள்ளதை அடுத்து, புதிய கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பட்டுக்கோட்டை வாசுகி திருமண மண்டபத்தில் ஜி.கே வாசனின் ஆதரவாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் 700 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அனைவரும் இந்திரா காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஜி.கே வாசனுக்கு ஆதரவு தெரிவித்தனர். எதிர்வரும் 28ம் தேதி திருச்சியில் ஜி கார்னர் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பெரும் திரளாக பங்கேற்பது என முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டத்தில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு என்ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தண்டாயுதபாணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
நூவன்னா

  

3 comments:

  1. Adirai el kagkeras
    kudumpam anral
    mms kudumpam than.
    avagka . Yaarpakkam
    avagka erukkum ane no, 1

    ReplyDelete
  2. குடும்ப ஜோசியர் ஆலோசனை படி இம்மாதம் 28ம் தேதி, வாசனுக்கு 50வது வயது பிறக்கிறது. அவரது பிறந்த எண், ஜாதகத்தின் ராசிப்படி கட்சி ஆரம்பித்து தமிழ் மாநில தேசிய காங்கரஸ் என்று பெயரிடலாம், உடனே மகளிர் அணியும் துவன்கிடுங்க அவங்க தான் வாயில் லட்டு வைத்து குத்தாட்டம் போட லாயக்கு, மகளிர் அணி இல்லாத தமிழக அரசியல் கட்சி உண்டா? இப்போ 2 MLA இவர் பக்கம் வரும் தேர்தலில் தனித்து நின்று அடுத்த தேர்தலில் கிருஷ்ணசாமி கட்சிபோல் போய்விடும்.

    தமிழக காங்கிரஸ்கார கோஷ்டிகளுக்கிடையே ஒற்றுமை கானல் நீரே.துணிச்சலாக பழைய பெருச்சாளிகள் அனைவரையும் கட்சியை விட்டு நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு அளித்தால் மட்டுமே காங்கிரஸ் தமிழகத்தில் துளிர்க்கும். கழக கட்சிகள் மீது மக்கள் அதிருப்தி நிலையிருக்கும் போது காங்கிரஸ் தலைமை தமிழ் நாட்டில் அதிக கவனம் செலுத்தினால் கட்சி வளர வாய்ப்புண்டு இல்லையேல் ICU ல் தான் இருக்கும்.

    ReplyDelete
  3. நான் எந்த கட்சியையும் சேராத நடுநிலைவாதி இருப்பினும் எனது அனுபவங்களை கூறுவதில் தவரில்லை என்றே நினைகின்றேன்

    காங்கிரஸ் கட்சி நாடுமுழுவதும் பிரகாசமானாள் அதிலே சேர்ந்து கொண்டு மத்திய மந்திரி பதவி வகிக்கும் மூப்பனார் குடும்பம் அந்த கட்சி சரிவில் வரும்போது தன்னை அதிலிருந்து விலக்கிக்கொண்டு தனி கட்சி ஆரம்பிப்பதும் அதற்க்கு பின்னால் தொண்டர்கள் சேருவதையும் நாம் இன்றைக்கு நேற்று பார்க்கவில்லை ...

    வெள்ளையர்கள் ஆட்சிகாலத்தில் அவர்களுக்கு துணை போய் எண்ணில் அடங்கா சொத்துக்களை சேர்த்த தமிழ் நாட்டின் விரல் விட்டு எண்ணும் ஜாமீன் பரம்பரை குடும்பம்தான் இந்த மூப்பனார் கோஸ்ட்டி அந்த சொத்துகளை பாதுகாக்கவே இவர்களின் இப்படிப்பட்ட அரசியல் பிரவேசம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.